பக்கம் எண் :

மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது

மாணிக்கஞ் செட்டி யோசிக்கிறான்:-

"பார்ப்பான் கெட்டிக்காரன். நாம் எடுத்திருக்கும் ஆலோசனைக்கு இவனை உதவியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் நமது நோக்கத்தை இவன் தெரிந்து கொள்ளக் கூடாது. தெய்வம் விட்டது வழி. ஒரு கை பார்ப்போம்.?

இப்படி யோசித்து மாணிக்கஞ் செட்டி சொன்னான்:-

"ஐயரே, ஒரு மூன்று மாசத்துக்கு உம்மை ஒரு சோதனைக்காகக் கடையிலே அமர்த்திக் கொள்ளுகிறேன். மூன்று மாசத்துக் கப்பால் என் மனதுக்குப் பிடித்தால் வேலை உறுதிதான். பிடிக்காவிட்டால், விலகிக் கொள்ள வேண்டும். முதல் மூன்று மாசத்துக்குச் சம்பளம் கிடையாது. உம், சம்மதமா?"

பார்ப்பாரப் பிள்ளை தன் மனதுக்குள்ளேயே "அட லோபிப் பயலே" என்று வைது கொண்டான்; சொல்லுகிறான்:- "செட்டியாரே, மூன்று மாசம் வேலை பார்க்கிறேன். பிறகு திருப்தியானால் வேலை உறுதி, இல்லாவிட்டால் அவசியமில்லை. அது உங்களுடைய இஷ்டம்போலே. ஆனால் உழைக்கிற நாள் சம்பளம் கையிலே கொடுத்து விடவேண்டும். சம்மதமா?" என்றான்.

"என்ன ஐயரே, விறைப்பிலே கேட்கிறீரே?" என்றான் செட்டி.

"சாதாரணமாகத் தான் கேட்டேன்? என்றான் பார்ப்பான்.

செட்டி சொல்லுகிறான்: - ஐயரே, போய் ஒரு வாரங் கழித்துத் திரும்பி வாரும். அப்போது அவசியமானால் சொல்லுகிறேன்.?