பக்கம் எண் :

மாதர் - பெண் விடுதலை (2)

இந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையானஆண் மக்களுக்கே விடுதலை உண்டாகவில்லை. ஆனால்இவ்விடுதலை பெரும் பொருட்டாக நாடுதோறும் ஆண்மக்கள் பாடுபட்டு வருகிறார்கள். ஆண்மக்கள்ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டிருக்கும் கொடுமை சகிக்கமுடியாது ஆனால், இதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைக்காட்டிலும் பல்லாயிர மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள்பெண் கூட்டத்தை ஆண் கூட்டம் அடிமைப்படுத்திவைத்திருப்பதால் விளைகின்றன.

அடிமைத் தேசங்களிலே கூட ஆண் மக்களிற்பெரும் பாலோர் - அதாவது ரஹஸ்யப் போலீஸ்"உபத்திரவத்திற்கு இடம் வைத்துக்கொண்டவர். தவிரமற்றவர்கள் - தம் இஷ்டப்படி எந்த ஊருக்குப் போகவேண்டுமானாலும், போகலாம், எங்கும் சஞ்சரிக்கலாம்.தனியாக சஞ்சாரம் பண்ணக்கூடாதென்ற நியதி கிடையாது.ஆனால் பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்சரிக்க வழியில்லாததேசங்களும் உள. அவற்றில் நமது தேசத்தில் பெரும் பகுதிஉட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப்படுகிறேன்.

'ஓஹோ! பெண்கள் தனியாக சஞ்சாரம் செய்யஇடங்கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து போகும்.ஒருவிதமான நியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப்பிராயமாய்விடுவார்கள்' என்று சில தமிழ்நாட்டு வைதிகர் நினைக்கலாம்.அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்பெண்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாமென்றுவைத்திருக்கிறார்கள். அதனால் பூகம்ப மொன்றும் நேர்ந்துவிடவில்லை. ஸ்ரீமதி அனிபெஸண்டை நம்மவர்களிலே பலர் மிகவும்மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிறார்கள். ''அவரைப்போலே நமதுஸ்திரீகள் இருக்கலாமே'' என்றால், நம்மவர் கூடாதென்று தான்சொல்லுவார்கள். காரணமென்ன?  ஐரோப்பிய ஸ்திரீகளைக்காட்டிலும் நமது ஸ்திரீகள் இயற்கையிலே நம்பத்தகாதவர்கள்என்று தாத்பர்யமா?

''மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம் காட்டினால்"நமக்கு ஸரிப்படாது. நாம் ஆரியர்கள், திராவிடர்கள். அவர்களோ,கேவலம் ஐரோப்பியர்'' என்று சொல்லிச்சிலர் தலையசைக்கலாம்.

சரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள்யதேச்சையாகச் சஞ்சாரம் பண்ணலாம். தமிழ் நாட்டில் கூடாது.ஏன்?