பக்கம் எண் :

மாதர் - தமிழ் நாட்டு மாதருக்கு

அறிவின் வலிமையே வலிமை. அறிவினால்உயர்ந்தோர்களை மற்றோர் இழிவாக நினைப்பதும்,அடிமைகளாக நடத்துவதும் ஸாத்யப்படமாட்டா. அறிவின்மேன்மையால் வெளித் தேசங்களில் உயர்ந்த கீர்த்திபடைத்து மீள்வோரை அதன் பிறகு இந்தத் தேசத்தார்கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள்வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்திஸம்பாதித்துக்கொண்டு வருவார்களாயின், அதினின்றும்இங்குள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் மதிப்பு உயர்ந்துவிடும். இந்த விஷயத்தை ஏற்கெனவே நம்முடையமாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிறார்கள்.வங்காளத்துப் பிராமண குலத்தில் பிறந்து ஹைதராபாத்"நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் ஸ்ரீமதிஸரோஜினி நாயுடு என்ற ஸ்திரீ இங்கிலீஷ் பாஷையில்உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள்மிகவும் போற்றும்படியாக இங்கிலீஷில் கவிதைஎழுதுகிறார். இவருடைய காவியங்கள் பலஇங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும்உயர்வாகப் பாராட்டப்படுகின்றன. மேலும், இந்த ஸ்திரீஇங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்துமுன்னேற்றத்தையொட்டி அற்புதமான ப்ரஸங்கங்கள்செய்து சிறந்த கீர்த்திடைந்திருக்கிறார். மேலும், வங்காளி,பாஷையிலே கவிதை யெழுதுவோராகிய ஸ்ரீமதி காமிநீராய், ஸ்ரீீமதி மன குமாரி தேவி, ஸ்ரீமதி அநங்கமோஹினி தேவி என்ற மூன்று ஸ்திரீகளுடையபாட்டுக்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்துஅமெரிக்காவிலுள்ள பத்திரிகையொன்றுபுகழ்ச்சியுரைகளுடன் சிறிது காலத்துக்கு முன்பு ப்ரசுரம்செய்திருப் பதினின்றும், இம்மாதர்களுக்கு அமெரிக்காவில்நல்ல கீர்த்தியேற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

புனா நகரத்துச் சித்திர பண்டிதராகிய ஜனாப்பைஜீரஹ்மின் என்பவர் அமெரிக்காவின் ராஜதானியாகிய''நியூயார்க்'' நகரத்திற்குப் போய் சென்ற வருஷத்தில்அந்நகரத்துச் சிற்பிகளால் மிகவும் போற்றப்பட்டார்.இவருடைய சித்திரங்களை அங்குள்ளோர் மிகவும் வியந்தனர்."அஜந்தாவிலுள்ள குகைச்சித்திர வேலைகளின் ஆச்சரியத்தைக்குறித்து ஸ்ரீமான் பைஜீரஹ்மின் கொலம்பியா ஸஸவகலாசங்கத்தாரின் முன்னே நேர்த்தியான உபந்யாஸம் புரிந்தார்.இவருடன் இவருடைய மனைவியும் அங்கு சென்றிருந்தாள்.இவர் ''இந்தியா தேசத்து சங்கீதம்'' என இங்கிலீஷில் ஒருபுத்தக மெழுதியிருக்கிறார். ஹிந்து ஸங்கீத சாஸ்திரத்திலும்வாய்ப்பாட்டிலும் நல்ல தேர்ச்சியுடையவர். இவர்அமெரிக்காவில் பல மாதர் ஸபைகளின் முன்பு ஹிந்துஸங்கீதத்தைக் குறித்து பல உபந்யாஸங்கள் செய்தார்.இடைக்கிடையே தம் உபந்யாஸக் கருத்துக்களை திருஷ்டாந்தப்படுத்தும் பொருட்டு நேர்த்தியான பாட்டுக்கள் பாடிஅந்நாட்டினரை மிகவும் வியப்புறச் செய்தார். இங்ஙனம், தமிழ்மாதர்களிலும் பலர் மேல்நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்றுமீள்வாராயின், அதினின்றும் இங்கே நம்முடையஸ்திரீகளுக்குள்ள மதிப்பு மிகுதிப்படுமென்பதில் சிறிதேனும்ஐயமில்லை. எவ்வாறு நோக்கிய போதிலும், தமிழ்நாட்டு மாதர்ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவராயின் அதற்குக்கல்வித் தோணியே பெருந்துணையாம். எனவே, கொஞ்சம்கொஞ்சம் பல துறைகளில் பயிற்சி வாய்ந்திருக்கும் தமிழ்சகோதரிகள் இரவு பகலாகப் பாடுபட்டு அவ்வத்துறைகளில்நிகரற்ற தேர்ச்சி பெற முயலவேண்டும். இடைவிடாத"பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கையறிவை மிகவும்உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம்.ஓளவையார் பிறந்து வாழ்ந்த தமிழ் நாட்டு மாதருக்கு அறிவுப்பயிற்சி கஷ்டமாகுமா?  சற்றே ஊன்றிப் பாடுபடுவார்களாயின்,தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்துவிடுவார்கள். அறிவு திறந்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக்கைப்பற்றுதல் அதிஸூலபமாய் விடும். எனவே, பலவிதசாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள்; தமிழ்ச் சகோதரிகளே!அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப்போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள்.விடுதலைத் தெய்வம் உங்களைத் தழுவும் பொருட்டுஇரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு காத்து நிற்கிறது.தமிழ் மாதர்களே! மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்குநல்ல காலம் வருகிறது! வந்து விட்டது; நீங்கள் விடுதலைபெறுவீர்கள்; உங்களால் உலகம் மேன்மையுறும்.