பக்கம் எண் :

மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்

தமிழ் நாகரீகத்தைக் குறித்து சென்ற வ்யாசத்திலேபொதுப்படையாக சில விஷயங்கள் சொன்னேன். இங்குஅவற்றைச் சற்று விஸ்தாரமாகத் தெரிவிக்கின்றேன். பண்டைத்தமிழ் நாகரீகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமான ஸ்வதந்திரம்இருந்தது. இதற்குரிய காரணங்களில் முக்கியமானது யாதெனில்,தமிழ் நாட்டுக்கு மூல அரண்போல் இயற்கையால்வகுப்புற்றிருக்கும் மலையாள நாட்டின் பயிற்சிக்கும் தமிழ்நாகரீகத்திற்கும் எப்பொழுதும் அதிகமான ஊடாட்டமிருந்துகொண்டு வந்தது. மலையாளத்து நாகரீகமோ ஸ்திரீகளைமுன்னிட்டு விளங்குவது.

மிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும்"புராதனமான மலையாள பாஷையும் ஒரே வஸ்துதான்.பிற்காலத்திலும் சேரநாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகவேகணக்கிடப்பட்டு வந்தது. சேரரனைவரும் தமிழரசரே. தமிழ்நாடுவேந்தருள்ளே சேர்த்தெண்ணப்பட்டு வந்தனர். பாஷையையொப்பவே நாகரீக விஷயத்திலும் மிகப் பெரிய தமிழ்நாகரீகமும் மிகப் பழைய மலையாள நாகரீகமும் ஒரேவஸ்துதான்.

பிற்காலத்தில் மலைக்கோட்டைக்கு உட்பட்டமலையாள நாடு பழைய தமிழ் நாகரீகத்தை இயன்றவரைசிதையாமல் காப்பாற்றிக்கொண்டு வந்தது. மலையடிக்குக்கிழக்கே மைதானத்தின் மீது வளர்ச்சி பெற்ற தமிழ்நாகரீகமோவெனில், தெலுங்கு முதலிய வடநாட்டுப்பயிற்சிகளின் ஊடாட்டத்தால் நாளுக்கு நாள் அதிக மாறுதல்பெற்று ஹிந்து தேசத்தின் பொது நாகரீகத்தை அனுசரித்துவருவதாயிற்று.

எனினும், மலையாளத்துப் பழக்கம் ஒருபோதும்நீங்கவேயில்லை. மலை நாட்டு ஆண் மக்கள், உலகமெங்கும்,புலி, கரடி, ஓநாய் முதலிய மலை மிருகங்களுடன் போராடியும்,மலை வெப்பத்துக்கும், மலை மழைக்கும், மலைப் பனிக்கும்,மலைத் தீக்கும் தப்பியும், கஷ்டத்துடன் பிழைக்க"வேண்டியவர்களாதலால், மைதானங்களில் வாழும் ஜனங்களைப்போல் ஸ்திரீகளின் விஷயத்தில் அதிக கடின சித்தமில்லாமல்அவர்களைத் தயவுடனும், மதிப்புடனும் நடத்துவது வழக்கம்.ஐரோப்பாவுக்குள்ளே ஸ்விட்சர்லாண்டு தேசத்து மலைப்பெண்கள் மற்றப் பகுதியிலுள்ள மாதரைக் காட்டிலும் அதிகஸ்வதந்திரமுடையோராக வாழ்ந்து வருகின்றனர்.