பக்கம் எண் :

கலைகள் - ரத்னமாலை

தர்க்கம்

"விரைந்து கேட்க; மெல்லச் செல்லுக."  (பைபில்.)

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:  "பிறர் குணதோஷங்களைப் பற்றித் தர்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன், பொழுதை வீணே கழிக்கிறான். தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப்பற்றி யோசித்தல் வீண்."

'ஹெர்மஸ்' என்ற புராதன மிசிர (எகிப்து) தேசத்து ஞானி:-  "மகனே, விவாதத்திலே நேரங்கழித்தல் நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்."

'ஸொக்ராதெஸ்' என்ற கிரேக்க ஞானி:-  "அறியாதார் பேச்சை நிறுத்தினாற் கலக மில்லை."

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-  "வாதாடுவதனால் பிறன் தனது பிழைகளை அறிந்துகொள்ளும்படி செய்ய முடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன் பிழைகளை அவனவன்தெரிந்துகொள்ளுவான்."

திருவள்ளுவர்:-

"யாகாவா ராயினும் நாகாக்க"
"சொல்லிற் பயனுடைய சொல்லுக"