பக்கம் எண் :

சமூகம் - தேசீயக் கல்வி

  வீடு துன்பமாக இருப்பதின் மூல காரணம் கணவனுக்கும் மனைவிக்கும் மனப் பொருத்தமில்லாமை. ஸ்திரீ புருஷ விரோதத்தால் உண்டாகும் துன்பங்களே வீட்டுத் துன்பங்களுக்கெல்லாம் ஆதாரம்.

கொடுங்கோன்மை தவறு என்றும், கொடுங்கோன்மை இழைத்தால் அதற்குமேல் கொடுங்கோன்மை அவசியம் விளையும் என்றும், அவனவன் வீட்டிலிருப்போரைக் கொல்லாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்வானாயின், உலகத்தில் கொடுங்கோன்மையும் போரும் விளையக் காரணமில்லையென்றும் "நான் கருதுகிறேன். குடும்ப வாழ்க்கையே மற்றெல்லா வாழ்க்கைகளிலும் சிறந்தது. இதனால் அன்றோ திருவள்ளுவரும்,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்      நல்லாற்றின் நின்ற துணைஎன்றார்.

காதல்-விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்றுஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித பண்டிதைகளால்ஆதரிக்கப்படுகிறது. அது நியாயம் என்பதற்கு அந்தக் கக்ஷியார்காட்டும் ஆதாரங்கள் பல. அதாவது, பூமண்டல முழுதில் சென்றகால - நிகழ்கால அனுபவங்களை ப்ரமாணமாகக் காட்டுகிறார்கள்.அதாவது, பூமண்டலத்தின் சரித்திரத்தில் வ்யபிசாரம் ஜனவழக்கத்தில் தள்ளப்படாமலும் ஏகபத்நீவ்ரதம் பாதிவ்ரத்யம்என்ற இரண்டுவித தர்மங்களும் பெரும்பாலும் ஆதர்சங்களாகவும்நடைபெற்று வருகின்றனவென்றும், அக்னி ஸாக்ஷி வைத்து'உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை என்று ஸத்யம்பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மிமிதிப்பதும்,அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம்அனுபவத்தில் ஸஹிக்கத்தக்க அல்லது ஸஹிக்கத்தகாத"பந்தங்களாகவே முடிகின்றனவென்றும், ஆதலால் அவற்றைஇஷ்டப்படி அப்போதப் போது மாற்றிக்கொள்ளுதலே நியாயமென்றும். இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகிறதென்றும், ஆதலால், விவாகம் 'சாச்வத பந்தம்' என்று வைத்தல்பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள். மேலும்,ஐரோப்பாச் சட்டத்திலும் மகமதியச் சட்டத்திலும் ஸ்திரீபுருஷர் தனது விவாகத்தை ரத்து செய்துகொள்ளலாம் என்றநியாயம் ஏற்பட்டிருத்தல் தமது கொள்கையை மனுஷ்ய நீதிஏற்கனவே அங்கீகாரஞ் செய்து கொண்டுவிட்டது என்பதற்கு ஒரு பலமான திருஷ்டாந்தம் என்று மேற்படி விடுதலைக் காதல் (Free Love)  கக்ஷியார் சொல்லுகிறார்கள்.