பக்கம் எண் :

சமூகம் - பொதுக் குறிப்புகள்

மேலே காட்டிய முறைமைப்படி தேசீயப் பள்ளிக் கூடம் நடத்துவதற்கு அதிகப் பணம் செலவாகாது.மாஸம் நூறு ரூபாய் இருந்தால் போதும். இந்தத்தொகையை ஒவ்வொரு கிராமத்திலுள்ள ஜனங்களும்தமக்குள்ளே சந்தா வசூலித்துச் சேர்க்கவேண்டும். செல்வர்கள்அதிகத் தொகையும் மற்றவர்கள் தத்தமக்கு இயன்றளவு சிறு தொகைகளும் கொடுக்கும்படி செய்யலாம். 100 ரூபாய் கூடவசூல் செய்ய முடியாத கிராமங்களில் 50 ரூபாய் வசூலித்து.உபாத்தியாயர் மூவருக்கும் தலைக்கு மாஸச் சம்பளம் 12ரூபாய் கொடுத்து, மிச்சத் தொகையை பூகோளக் கருவிகள்,"ஸயன்ஸ்" கருவிகள், விவசாயக் கருவிகள் முதலியனவாங்குவதில் உபயோகப்படுத்தலாம். 100 ரூபாய்வசூலிக்கக்கூடிய கிராமங்களில் உபாத்தியாயர் மூவருக்கும், தலைக்கு 20 ரூபாய் வீதம் சம்பளம் ரூபாய் அறுபதுபோக மிச்சத் தொகையை மேற்படி கருவிகள் முதலியனவாங்குவதில் உபயோகப்படுத்தலாம். மேற்படி கருவிகள்எப்போதும் வாங்கும்படி நேரிடாது. முதல் இரண்து வருஷங்களுக்கு மாத்திரம் மாஸந்தோறும் மிஞ்சுந் தொகையை இங்ஙனம் கருவிகள் வாங்குவதிலும் புஸ்தகங்கள் வாங்குவதிலும் செலவிட்டால் போதும். அப்பால் மாஸந்தோறும் மிஞ்சுகிற பணத்தைப்பள்ளிக்கூடத்துக்கு க்ஷேமநிதியாக ஒரு யோக்கியமானஸ்ரீமானிடம் வட்டிக்குப் போட்டுவர ஏற்பாடு செய்யவேண்டும்.இவ்வாறன்றி ஆரம்பத்திலேயே கருவிகள் முதலியனவாங்குவதற்குப் பிரத்யேகமான நிதி சேகரித்து அவற்றைவாங்கிக்கொண்டு விட்டால் பிறகு தொடக்க முதலாகவே மிச்சப் பணங்களை வட்டிக்குக் கொடுத்துவிடலாம்.