பக்கம் எண் :

சமூகம் - ஜாதிக் குழப்பம்

இங்ஙனமே சில தினங்களின் முன்புவள்ளுவர்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கூட்டங் கூடித்தாங்கள் உயர்ந்த ஜாதியாரென்றும் மற்றப் பறையர்களைத்தொடக்கூடாதென்றும் அவர்களுக்குப் பஞ்சாங்கம்முதலியன சொல்லக் கூடாதென்றும் அவ்வாறு செய்யும்வள்ளுவர்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் துண்டுப்பத்திரிகைகள் போட்டிருந்தார்களாம். இதைக் கண்டு மனம்பொறுக்காமல் வள்ளுவக் குலத்தைச் சேர்ந்த ஸ்ரீமான்வி.எல். பெருமாள் நாயனார் என்பவர் ''வள்ளுவர் பறையரே,பஞ்சமரே'' என்பதை மிகவும் தெளிவாக ருஜூப்படுத்திசென்ற வியாழக்கிழமை (ஜூன் மாதம் 3-ம்தேதி)சுதேசமித்திரனில் ரஸமான வியாஸமொன்று எழுதியிருப்பதைக்"கண்டு என் மனம் சால மகிழ்ச்சி யெய்திற்று.

ஆனால், அதே வியாஸத்தில், நாயனார் நான்காம்வகுப்பாகிய வேளாளர் குலத்திலிருந்து பறையர் பிரிந்தாரென்றுசொல்லுவது பொருத்தமில்லாத வார்த்தை. இவர் எந்தஆதாரத்தில் இங்ஙனம் சொல்லுகிறார் என்பது விளங்கவில்லை.வெறும் ஜாதி விரோதத்தாலேதான் இங்ஙனம் சொல்லுகிறாரென்றுதோன்றுகிறது. வீண் பகைமைகளால் நன்மை ஏற்படாது.

எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படிப்புச்சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸமான அறிவுடையோராய்விடுவார்கள். மாம்ஸ போஜனம் செய்யும் வகுப்பினர் அதைநிறுத்திவிட வேண்டும். பிறகு ஸ்வாமி விவேகாநந்தர்சொல்லியபடி, எல்லாரையும் ஒரேயடியாக பிராமணராக்கிவிடலாம். கீழ் ஜாதியாரை நல்ல ஸம்ஸ்காரங்களால்பிராமணர்களாக்கிவிட முடியுமென்பதற்கு நம்முடைய வேதசாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கின்றன. அந்தப்படி இந்தியாமுழுதையும் பிராமண தேசமாக செய்துவிட்டால் நல்லதென்பதுஎன்னுடைய அபிப்பிராயம். எந்த ஜாதியாக யிருந்தாலும் சரி.அவன் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்குஒரு பூணூல் போட்டு, காயத்திரி மந்திரம் கற்பித்துக் கொடுத்துவிடவேண்டும். பிறகு, அவன் பிராமணனாகவே கருதப்படவேண்டும். இதுதான் விவேகாநந்தர் சொல்லிய உபாயம். கூடியவரை நல்ல உபாயமும் கூட. ஆனால், மேல் வகுப்பினர்தம்முடைய உயர்வை மறந்து கீழ் வகுப்பினருடன் கலத்தல்இதனிலும் சிறந்த உபாயமாகும்.