பக்கம் எண் :

சமூகம் - பருந்துப் பார்வை

4. காசியிலே ஹிந்து ஸர்வகலா சங்கம் கட்டும் போது.பல மாளிகைகள் ஹிந்து சிற்பத்தைத் தழுவியிருக்க வேண்டும்.நவீனபாடசாலைகளுக்குரிய லக்ஷணங்கள் குறையக் கூடாது. ஆனால்,சிற்பத்தின் மேனி சுதேசிய விஷயமாக இருக்க வேண்டும். பாரததேசத்துச் சிற்பிகளிலே தமிழ் நாட்டு ஸ்தபதிகள் ஒரு முக்கியமானஅங்கமாவர். வங்கத்திலே மஹா கீர்த்தியுடன் சோபிக்கும் நவீனசாஸ்திரிகளில் நாயகராகிய அவனீந்த்ரதாகூர் கூட இக்காலத்திலும்தமிழ் நாட்டில் வாழும் ஸ்தபதிகளிடம் உயர்ந்த தொழில் இருப்பதாகமிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். ஆதலால், மேற்படி ஸர்வகலாசங்கத்தின் கூட்டங்களிலே கூடியவரை நமது தமிழ் ஸ்தபதிகளின்உதவியை நாடிக்கொள்ளும்படி தமிழ் நாட்டிலுள்ள பண்டிதர்களும்ஜனத்தலைவர்களும் மேற்படி சங்கத்திற்குப் பொருள் கொடுத்துஉதவுந்தோறும் முயற்சி செய்ய வேண்டும்.

5. ஜப்பானில் ஸம்ஸ்கிருத படிப்பு வளருகிறது. அங்கே ஸம்ஸ்கிருத படிப்பு எந்தக் காலத்தில் தொடங்கியது என்றுஇன்னும் நிச்சயமாய்ச் சொல்ல இடமில்லை. ஆறாம் நூற்றாண்டில்அந்த நாட்டுக்குள் பௌத்தமதம் நுழைந்த போதே ஸம்ஸ்கிருதமுங்கூட நுழைந்திருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஏழாவதுநூற்றாண்டின் மத்தியிலே சீன தேசத்தில் மொழிபெயர்ப்புச் சங்கம்நடத்திய ஹயலுக்தஸ்வ் என்ற பண்டிதரிடம் ஜப்பானிலிருந்து பலகுருக்கள் வந்து ஸம்ஸ்கிருதம் படித்ததாகச் சரித்திர ஆதாரத்தினால்தெரிகிறது. 735 (கி.பி.) - ஆம் வருஷத்தில் பாரத தேசத்திலிருந்துபோதிஸேனன், யத்ரியத் என்ற இரண்டு பேர் ஜப்பானில் போயிறங்கினார்கள். சிறிது காலம் சீன ராஜதானியிலிருந்துவிட்டுஜப்பானிலிருந்து அங்கு வந்த மந்திரிகளுடனே அங்கிருந்துபுறப்பட்டு ஜப்பானுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இதற்கப்பால் ஸமஸ்கிருதப் படிப்பு மிகுதிப்பட்டது. ஜப்பானிலிருந்து ஸம்ஸ்கிருதபண்டிதர் சீனத்திலே போய் மஹாகீர்த்தியடைந்தனர். திருஷ்டாந்தமாக 805(கி.பி.) - ஆம் வருஷத்தில் ரேய்ஸோன் என்ற ஜப்பானிய குரு சீனத்துக்குப்போய் அங்கே பௌத்தமொழி பெயர்ப்புச் சங்கத்தின் தலைமையை நடத்தினார். அப்போது ந்ராஸ்னா நன்றென்ற ஹிந்து பண்டிதர் அங்கிருந்தார். இருவருஞ் சேர்ந்து ஒரு "பெரிய சாஸ்திரம் ஸம்ஸ்கிருதத்திலிருந்து பொழி பெயர்த்து வந்தார்கள். இப்போதும் அங்கே பௌத்த தர்மத்துக்கு அந்நூல் பெரிய ப்ரமாணமாக நிற்கின்றது. மேலும் அக்காலத்திலிருந்து ஜப்பானிலிருந்து பலர் பாரததேசத்துக்கு வந்துபோனதாகவும் தெரிகிறது. இப்போது ஜப்பானிலே பௌத்தமடங்களில் நூற்றுக்கணக்கான மனிதர் ஸமஸ்கிருதம்படிக்கிறார்கள்; ஒவ்வொரு ராஜாங்கத்து ஸர்வ கலாசாலையிலேயும்சங்கத்திலேயும் பெரிய தேர்ச்சி கொண்ட ஜப்பானிய ஸம்ஸ்கிருதபண்டிதர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்குள்ள ஸம்ஸ்கிருத பண்டிதர்கள் ஜப்பானிலுள்ள ஸம்ஸ்கிருத பண்டிதர்களுடன் ஓலைஎழுதிப் பழக்கமேற்படுத்திக் கொள்ளலாம். டோக்யோ ஸாம்ராஜ்யசர்வகலா சங்கத்தில் பண்டித் அநேஸாரி  (Anesari)  என்பவர்இருக்கிறார். அங்கிருந்து பழைய சுவடிகள் தருவித்துப் பார்க்கஏற்பாடு செய்ய வேண்டும். ஹிந்து ஸர்வகலா சங்கத்தார்இவ்விஷயத்தைக் கவனிப்பது நலமாகும்.