குழந்தைப் பிராயமுதலாகவே நாம்பழகி விட்டபடியால், இதெல்லாம் நமக்குஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஆகவே, கவலைஏற்படவில்லை. தண்ணீர் தங்கி ஓயாமல் செப்பனிட்டட்ராமதண்டவாளத்தில் என்னுடைய வண்டிச் சக்கரம் போகும்போது,எனக்கு மறதி தெளிந்து ஜனங்களின் போக்குக்கும் நீரோட்டத்துக்கும் சண்டை உண்டாய் அதிலிருந்து அழுக்குத்தண்ணீர் என்மேல் வந்து தெறிக்கும் செய்தியிலே புத்தி செல்லுகிறது. 'இதை நாம் ஏன் பொறுக்கிறோம்?' என்று சிறிதுகாலமாக எனக்கொரு யோசனை உண்டாய் வருகிறது, இதைப் பொறுக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. பொறுக்கக் கூடாதென்று தீர்மானிப்பதால் அனுகூல முண்டு. அதற்கு ஐரோப்பியர்கள் வாஸம் செய்கிற'சௌரிங்கி' ரஸ்தா சாக்ஷி. அந்த ரஸ்தாவில் முக்கால் பங்குக்குமேலே ட்ராம் தண்டவாளத்தைப் போட்டு, அதில் முடிவில்லாமல் 'யானை நடை'யில் செப்பனிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீதியார் ட்ராம்வே அதிகாரிகளுக்குஊணுறக்கம் இல்லாதபடி செய்து விடுவார்கள். நாமோ, கீழ்ப்படிதலாகிய குணமே வடிவெடுத்து வந்திருப்பதால், எதையும் திருத்த முடியுமென்பதை நம்மால் நம்பமுடியவில்லை.இதனால் நமது கன்னத்தில் கண்ணீர்ப் பெருக்கும் நமது வீதியில் ஜலதாரைப் பெருக்கும் தீர இடமில்லை. இது ஸாமான்ய விஷயமன்று. எதிலுமே 'நமக்கு நாம் நாயகர்'என்ற எண்ணம் நமக்கு ஏற்படவில்லை. கண்ணாடி மூடிக்குள்ளே தண்ணீர் விட்டு அதில்வளர்க்கப்பட்ட பொன்னிற மீன்கள், கண்ணாடியைத் தண்ணீர்என்று நினைத்து அதில் வந்து மோதிக் கொள்ளுமாம்; பிறகுபெரிய தொட்டியில் கொண்டு போட்டாலும் தண்ணீரைக் கண்ணாடி என்று நினைத்துப் பயந்து பழைய எல்லைக்குள்ளேசுற்றுமாம். 'அதுபோல, தலை உடைந்து போமோ, என்கிற பயம் நம்முடைய எலும்புக்குள் ஊறிக்கிடக்கிறது. மஹாபாரதத்தில்,அபிமன்யு பகைவரின் வ்யூகத்துக்குள் நுழையக் கற்று, மீளுவதைக் கற்காமல் மாண்டது போலே. நாமும் பிறவி முதல்கட்டுப்படக் கற்று, அவிழ்க்கக் கல்லாமல், நமக்கு நேரிடும் சகலவிபரீதங்க்ளுக்கும் தலைகுனிகிறோம். மனிதருக்கும், நூல்களுக்கும், திசைகளுக்கும்,எல்லைகளுக்கும், கற்பனைத் தடைகளுக்கும் தலை குனிந்துபல தலை முறையாய் வழக்கமாய் விட்டப்படியால், எந்ததுறையிலும் நாமாக ஒன்று செய்ய முடியும்' என்கிற உண்மைநம் முகத்தின் முன்னே நின்றாலும், கண்ணுக்குத் தெரியாமல் போகிறது. ஐரோப்பிய மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டாலும்நமக்குத் தெளிவுண்டாக வில்லை. |