பக்கம் எண் :

மாதர் - பெண்

இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னால்மூன்றாவது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக்கூடத்துவேலை முடிந்தவுடனே  வீட்டுக்கு வந்து,  ஸாயங்காலம்ஆறு  மணி  முதல் எட்டு  மணிவரை  தன் வீட்டுத்திண்ணையில் சினேகிதர்களுடன் பேசிக்கொண்டு, அதாவது,கர்ஜனை செய்துகொண்டிருப்பார். பிறகு சாப்பிடப் போவார்.சாப்பிட்டுக் கையலம்பிக் கை ஈரம் உலர்வதற்கு முன்பு,மறுபடி திண்ணைக்கு  வந்து சப்தம் போடத் தொடங்கிவிடுவார்.  இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார்,  'இடிப் பள்ளிக் கூடம்'  என்று  பெயர்"வைத்திருக்கிறார்கள். அந்த இடிப்பள்ளிக்கூடத்துக்குவந்து மாலைதோறும் நாலைந்து பேருக்குக் குறையாமல் இவருடைய பேச்சைக்கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தநாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமலிருக்கும்விஷயம் அனேகருக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

மேற்படி வாத்தியாருக்கும் எனக்கும்ஸ்நேகமுண்டு. நானும் அடிக்கடி இடிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் பேச்சுக் கேட்கும் வழக்கமுண்டு.ஹிந்துக்கள் பரம மூடர்களென்று அவர் சொல்லும்வார்த்தையை மாத்திரம் நான் அங்கீகாரம் செய்துகொள்வதுகிடையாது. மற்றபடி, அநேக விஷயங்களில் அவருடையஅபிப்பிராயங்கள் எனக்கு நியாயமாகவே தோன்றும்.

நாலாநாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மழைத்"தூற்றலாக இருந்தபடியால், நான் வெளியே உலாவப்போகாமல்,பொழுது போக்கும் பொருட்டாக மேற்படி இடிப் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே வாத்தியார் கர்ஜனைஅட்டஹாஸமாக நடந்து கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டிருந்தவர்களின் ''ஜாப்தா'' பின்வருமாறு:

(1) வீராசாமி நாயக்கர். (இந்த நாயக்கர் ஆனைக்குட்டியைப் போலிருப்பார்; சர்க்கார் உத்தியோகம்; முப்பத்துமூன்று வயது; அதற்குள் சரியான வழுக்கை; நல்ல வ்யவஹாரஞானமுடையவர்; வாய் பேசுவது கிடையாது. கோபம் வரும்போது கொஞ்சம் பொடியெடுத்து மூக்கில் போட்டுக் கொள்வார்).

(2) கொங்கண பட்டர். (இவர் பெருமாள் கோயில்பட்டர்; ஏழரையடி உயரம்; இவரை யார் வேண்டுமானாலும்வையலாம்; வேஷ்டியைப் பிடித்திழுக்கலாம். மேற்படி வீராசாமிநாயக்கர் இவருடைய தலையில் கால்மணி நேரத்திற் கொருதரம்குட்டுவார். இவருக்குக் கோபம் வராது. இவருடைய ஜாதகத்திலேகோபத்துக்குரிய கிரகம் சேரவில்லை யென்று கேள்வி).