பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஊங்கண் = முற்காலம்.

“ஊங்க ணோங்கிய வுரவோன் றன்னை”     (மணிமே. 21 181)

ஊங்கணோர் = முன்னோர்.

“தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினையின்” (புறம். 39)

முன்னிலைப் பெயர்

முன்னிலை யிடப்பெயர்கள் முன்னால் நிற்பவனைச் சுட்டுவதால், அவை உகரச்சுட்டடியினின்றே தோன்றியுள்ளன.
எழுவாய்வேற்றுமையடி
முதல்நிலை ஒருமை ஊன் உன்
பன்மை ஊம் உம்
இரண்டாம் நிலை ஒருமை நூன் நுன்
பன்மை நூம் நும்
மூன்றாம் நிலை ஒருமை நீன் நின்
பன்மை நீம் நிம்
நாலாம் நிலை ஒருமை நீ
பன்மை நீயிர், நீவிர், நீர்
ஐந்தாம் நிலை இரட்டைப் பன்மை ஊங்கள் உங்கள்
நூங்கள் நுங்கள்
நீங்கள் நிங்கள்

சில சொற்களின் ஊகாரமுதல், ஈகாரமுதலாகத் திரியும்.

ஒ. நோ :தூண்டு - தீண்டு
தூண்டா விளக்கு - தீண்டா விளக்கு
நூறு - நீறு
பூளை - பீளை
பூறு - பீறு

தமிழர் தமக்குள் பிறரை இழிந்தோன், ஒத்தோன், உயர்ந்தோன் என மூவகைப்படுத்தி, அதற்கேற்பப் பெயரும் வினையும் அமைத்த காலத்தில், ஒருமைப் பெயர் இழிந்தோனையும், ஒற்றைப்பன்மைப்