பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

தள்ளுதல். 12. செய்வினையைச் செய்தவர்மேல் ஏவுதல். 13. நஞ்சைமாற்றுதல்.

. திருகிசு, தெ. திப்பு.

திருப்பு = ஒருமுறை போய் வருகை (trip).

திருப்பு - திருப்பம் = 1. திரும்புகை. “வடபத்திரசாயி முத்திருப்பங் கொண்டு’’ (குருபரம். 77). 2. திரும்புகோடி. 3. வாழ்க்கையில் அல்லது கதையில் நேரும்பெருமாற்றம் (turning point).

திரும்பு - திறம்பு. திறம்புதல் = மாறுபடுதல், மீறுதல், விலகுதல்.

திரு - தெரு - தெரும். தெரும்வரல் - தெருமரல் = 1. மனச் சுழற்சி. “அலமரல் தெருமரல் ஆயிரண்டுஞ் சுழற்சி’’ (தொல். சொல். 311). 2. அச்சம் (திவா.).

தெரும் வருதல் - தெருமருதல் = மனஞ்சுழலுதல். “வளைமுன்கை பற்றிநலியத் தெருமந்திட்டு’’ (கலித். 51)

தில் - தெல் - தென். தென்னுதல் = (செ. குன்றியவி.) - 1. கோணுதல். 2. சாய்தல். (செ. குன்றாவி.) - நெம்புதல்.

பல் தென்னிக்கொண்டிருக்கிறது என்பது உலக வழக்கு.

தென் - தென்னை = பெரும்பாலும் கோணி வளரும் மரம்.

“பல்வகை யுதவி வழிபடு பண்பின்
அல்லோர்க் களிக்கும் அதுமுடத் தெங்கே’’     (நன். 35)

தென் - தென்கு - தெங்கு = 1. தென்னை. “தெங்கி னிளநீ ருதிர்க்கும் வளமிகுநன்னாடு’’ (புறம். 29). 2. தெங்கந்தீவு. 3. போர்ச்சேவலின் திறங்குறிக்கும் குழூஉக்குறிகளுள் ஒன்று. “தெங்குக்குத் தெங்குவெல்லும் எனக் கோழிகளின் திறமறிந்துவிடுதல்’’ (பு. வெ. 12, வென்றிப். 6, உரை). . தெங்கு, . தெங்ங.

தெங்கு - தெங்கம். “தெங்கங்களு நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற்படப்பை’’ (தேவா. 846 3).

தெங்கங்காய் - தேங்காய். “தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்’’ (யாப். வி. 95, ப. 372).

தெ. தெங் (க்)காய, . தேங்ஙா.

தென் - தென்று - தெண்டு. தெண்டுதல் = நெம்புதல், கிளப்புதல்.