பக்கம் எண் :

17

(3) ஒரேயொலி வெவ்வேறு செவிக்கு வெவ்வேறு வகையாய்க் கேட்பதால், ஓர் ஒலிக்குறிப்பு வெவ்வேறு வடிவிலும் அமையலாம்.

எ-டு: குறட்டு, துறட்டு (குறட்டையொலி)
(சலக்கு) - சளக்கு, சளப்பு (துப்பொலி)
வீர்வீர், வீரா வீரா (குழவி கதறொலி)

(4) சில வொலிகள் ஒரே செவிக்கு வெவ்வேறு வகையாய்க் கேட்கலாம்.

எ-டு: குய், சுய் (சொய்) = தாளிப்பொலி.
ஓ, உவா - கக்கலொலி.

(ஓ-ஓக்களி, ஓங்களி; உவா - உவட்டு - உமட்டு - குமட்டு)2

(5) சில வொலிகள் வாயடைத்த நிலையில் மூக்குவழிப் பிறக்கும் மூச்சொலிகளாதலின், அவை சரியாய் ஒத்தொலித்தற்குரியன. அவற்றினின்று பிறக்கும் ஒலிக்குறிப்புகளும் சொற்களும், அவற்றின் மூல வொலிகளை ஒருமருங்கே அல்லது இயன்ற அளவே ஒத்திருக்கும்.

ஒலிக்குறிப்புசொல்
எ-டு:
முக்(கு)முக்கு - முற்கு
மூங் முனங்கு

முக்குதல் கனமான பொருள்களைத் தூக்கும்போதும், முனங்குதல் கடுநோய்ப்பட்டிருக்கும்போதும், நிகழ்வன.

(6) சில வொலிக்குறிப்பினின்று பிறந்த சொற்கள், மூலவொலி யில்லாத எழுத்தையும் கொண்டிருக்கும்.

ஒலிக்குறிப்புசொல்
எ-டு:
லுலுலுலுகுலவை

கடைசியர் மங்கல அமங்கல வினைகளில் வாயால் நிகழ்த்தும் ஒலி குலவை.

7) ஒலிக்குறிப்புகளிற் சில தாமே சொல்லாவன; சில தம்மி னின்று சொற்களைப் பிறப்பிப்பன; சில இரண்டுமன்றி ஒலிக் குறிப்பாகவே நின்றுவிடுவன.

2. வழக்கில், ஓக்களித்தல் என்பது கக்கலுக்கு முந்திய வாயசைவையும், உமட்டல் (குமட்டல்) என்பது வாயசைவிற்கு முந்திய வயிற்றுணர்ச்சியையும், குறிக்கும்.