(3) ஒரேயொலி வெவ்வேறு செவிக்கு வெவ்வேறு வகையாய்க் கேட்பதால், ஓர் ஒலிக்குறிப்பு வெவ்வேறு வடிவிலும் அமையலாம். எ-டு: | குறட்டு, துறட்டு (குறட்டையொலி) | | (சலக்கு) - சளக்கு, சளப்பு (துப்பொலி) | | வீர்வீர், வீரா வீரா (குழவி கதறொலி) |
(4) சில வொலிகள் ஒரே செவிக்கு வெவ்வேறு வகையாய்க் கேட்கலாம். எ-டு: | குய், சுய் (சொய்) = தாளிப்பொலி. | | ஓ, உவா - கக்கலொலி. |
(ஓ-ஓக்களி, ஓங்களி; உவா - உவட்டு - உமட்டு - குமட்டு)2 (5) சில வொலிகள் வாயடைத்த நிலையில் மூக்குவழிப் பிறக்கும் மூச்சொலிகளாதலின், அவை சரியாய் ஒத்தொலித்தற்குரியன. அவற்றினின்று பிறக்கும் ஒலிக்குறிப்புகளும் சொற்களும், அவற்றின் மூல வொலிகளை ஒருமருங்கே அல்லது இயன்ற அளவே ஒத்திருக்கும். ஒலிக்குறிப்பு | சொல் | எ-டு: | | முக்(கு) | முக்கு - முற்கு | மூங் | முனங்கு |
முக்குதல் கனமான பொருள்களைத் தூக்கும்போதும், முனங்குதல் கடுநோய்ப்பட்டிருக்கும்போதும், நிகழ்வன. (6) சில வொலிக்குறிப்பினின்று பிறந்த சொற்கள், மூலவொலி யில்லாத எழுத்தையும் கொண்டிருக்கும். ஒலிக்குறிப்பு | சொல் | எ-டு: | | லுலுலுலு | குலவை |
கடைசியர் மங்கல அமங்கல வினைகளில் வாயால் நிகழ்த்தும் ஒலி குலவை. 7) ஒலிக்குறிப்புகளிற் சில தாமே சொல்லாவன; சில தம்மி னின்று சொற்களைப் பிறப்பிப்பன; சில இரண்டுமன்றி ஒலிக் குறிப்பாகவே நின்றுவிடுவன. 2. வழக்கில், ஓக்களித்தல் என்பது கக்கலுக்கு முந்திய வாயசைவையும், உமட்டல் (குமட்டல்) என்பது வாயசைவிற்கு முந்திய வயிற்றுணர்ச்சியையும், குறிக்கும். |