| ஒலிக்குறிப்பு | சொல் | எ-டு: | கூ | கூ(கூவு) | | காகா | காகம் | | சலக்கு | -- |
இங்குக் கூறப்பட்ட மூவியல்புகளும் மக்கள் செயலால் நேர் வனவே யன்றி, ஒலிக்குறிப்புகட்கு இயல்பாக வுரியனவல்ல. மக்கள் செயல் ஒலிக்குறிப்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டதென்றே அறிக. சில ஒலிக்குறிப்புகள் துணைவினையேற்று வினையாகும். எ-டு: ஓ-ஓக்களி. வீர் (வீறு) - வீரிடு (வீறிடு) (8) இருதிணை யுயிரிகளும் இயல்பாகக் கத்துவதைக் குறிக்கும் வினைச்சொற்கள் ஒலித்தல், கூப்பிடுதல் என்னும் இருபொருட்கும் ஏற்கும். எ-டு: | கத்துதல் | = | ஒலித்தல், | கூப்பிடுதல். | | கரைதல் | = | ஒலித்தல், | கூப்பிடுதல். | | கூவுதல் | = | ஒலித்தல், | கூப்பிடுதல். | | விளித்தல் | = | ஒலித்தல், | கூப்பிடுதல். | | அழைத்தல் | = | கத்துதல், | கூப்பிடுதல். |
இவற்றுட் கரை அழை என்னுஞ் சொற்கள் அழுதலையுங் குறிக்கும். (9) தமிழிலக்கணத்திற் கொவ்வா ஒலிக்குறிப்புகள் இலக் கணத்திற் கேற்ப மாற்றப்பெறும். எ-டு: லொட்டு - நொட்டு, லலல - தலல. (10) ஒலியெழும் வினைகளைக் குறிக்கும் சொற்களில், மெல்லோசை யுணர்த்த மெல்லொலி யெழுத்துகளும் வல்லோசை யுணர்த்த வல்லொலி யெழுத்துகளும் வரும். எ-டு: | கறி | - | கடி. | | கறி - கடி.கறித்தல், மெல்லக் கடித்தல். |
(11) ஒலிக்குறிப்புகளைப் பின்வருமாறு ஐவகையாய் வகுக்க லாம்: |