பக்கம் எண் :

55

மூலம் என்னுஞ் சொல் முதலாவது மரவடியையே குறித்திருத்தல் வேண்டும்.

“போதி மூலம் பொருந்தி”                                      (மணிமே. 26:47)

மூல - மூலி = மருந்திற்குரிய வேர்ச் செடிகொடி. மூலி - மூலிகை.

iii. திரண்டொலித்தல்

உலம் - உலம்பு. உலம்புதல் = பேரொலி செய்தல்.

குமுகுமெனல் = பேரொலி செய்தல்.

“குமுகுமெனவே முழக்க”                   (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 2)

கும் - குமுறு. கும் - குமுதம் = பேரொலி.

“கதறிமிகு குமுதமிடு பரசமயம்”                                   (திருப்பு. 948)

துள் - தள் - தழ - தழங்கு. தழங்குதல் = முழங்குதல்.

முள் - (மள்) - மண் = முழக்கு.

“மண்முழா மறப்ப”                                                 (புறம். 65)

முள் - முழ - முழங்கு - முழக்கு - முழக்கம்.

குறிப்பு: இங்குக் குறிக்கப்பட்ட சொற்கள் ஒலிக்குறிப்புத் தழுவியவை.

iv. பூப்படைதல்

நிலைத்திணையில், திரண்ட அல்லது பருத்த முதலும் சினையும் முதிர்ச்சியடையும். அதனால், திரட்சிபற்றிய சொற்கள் சில பூப் படைதலை உணர்த்தும்.

உருத்தல் = முதிர்தல்.

கும் - குமரி = திரண்டவள், கன்னி, கன்னிமை, இளமை, அழி வின்மை (என்று மிளமை).

மூப்பு சாக்காட்டிற் கேதுவாதலால், இளமை அழியாமையைக் குறித்தது.

கும்மல் = கூடுதல், குவிதல், திரளுதல், கும் - கொம் - கொம்மை = திரட்சி.