பலபொரு ளொருசொற்கள் “பலபொரு பலசொல்லுக்கு எதிராகும். “வேழம்’ என்பது, கரும்பு மூங்கில் யானை எனப் பலபொருள் தருதலின் பலபொரு ளொருசொல்லாம். பலபொரு ளொருசொற்கள் இருவகை நிலையில் ஏற்படுவ துண்டு. ஒன்று பல பொருட்கும் சிறப்புச் சொல் உண்டாயிருப்பது; இன்னொன்று அவை யில்லாதிருப்பது. கரும்பு மூங்கில் யானை என்னும் மூன்று சொல்லும் இருக்கும்போது, அவற்றுக்குப் பொதுவாக வேழம் என்னும் சொல் தோன்றுவது சிறப்புச்சொல் உள்ள நிலை; அம் மூன்றும் இல்லாதபோது அது தோன்றுவது சிறப்புச் சொல் இல்லா நிலை; இவற்றுள், முன்னது மொழியின் பண்பாட்டையும், பின்னது அஃதின்மையையும் உணர்த்தும். முதலாவது ஒருபொருட்கு ஒரு சொல் ஏற்பட்ட பின்னரே அதன் நுண்ணியல்புகளை யெல்லாம் குறிக்கும் ஒருபொருட் பலசொற்கள் ஏற்படுதலின், ஒருபொருட் பலசொற்கள் மலிந்துள்ள மொழிகளிலெல்லாம் மொழிப் பண்பாட்டை யுணர்த்தும் பலபொரு ளொருசொற்களே காணமுடியும். தமிழ்ஒருபொருட் பலசொன் மலிந்த மொழியாதலின், ஏற்கெனவே தனித்தனி சொற்பெற்றுள்ள பல்வேறு பொருள்களை இனத்தன்மையும் ஒப்புமையும் பற்றித் தொகுத்துச் சுட்டும் பலபொரு ளொருசொற்களே கொண்டுள்ளது. பலபொரு ளொருசொற்கள், (1) உண்மை (2) போலி என இருதிறப்படும். இனத்தன்மையும் ஒப்புமையும் தொடர்பும் பற்றிப் பல்வேறு ளொருசொல் உண்மையானதாம். எ-டு: கேழல் என்பது, பன்றியையும் அதற்கினமான யானையையும் குறிப்பது; வாரணம் என்பது, நெடுங்கடலையும் |