பக்கம் எண் :

27

மதுரைப் பெருமருதனார்                               (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்பு கொண்ட பெயருடைய சங்கப் புலவர்களுள் ஒருவர். இவரைப் பற்றிய வரலாற்றுச் செய்தி எதுவும் தெரியவில்லை.

நூல் :நற்றிணை 241.

மதுரைப் பெருமருதிளநாகனார்                          (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். பெருமருதன் என்பார் இவருடைய தந்தையார் என்பர்.

நூல் :நற்றிணை 251.

மதுரைப் போத்தனார்                                 (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர்.

நூல் :அகம் 75.

மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்               (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். மதுரை மருதங்கிழார் இவருடைய தந்தையார். மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் என்பார்களோடு உடன் பிறந்தவர்.

நூல் :குறுந்தொகை 332.