பக்கம் எண் :

29

மதுரை முத்துப்பிள்ளை (19 நூ)

நூல் : மன்மதன் சரித்திரப் பலவிசைக் கண்ணி (1880).

இந்நூல் மன்மதனது வரலாற்றை கீர்த்தனம் சிந்து முதலிய இசைப்பாடல்களில் கூறுவது.

மதுரை முதலியார், கு. (20 நூ)

ஊர் :மதுரை.
பிறப்பு :1898.
நூல்:தமிழ்ப்பெரும் புலவர், தமிழ்நாட்டுப் பெரியோர், சிலப்பதிகாரக் கட்டுரை.

தமிழ்நாட்டுப் பெரியோர் என்ற நூல் நம்மாழ்வார், மாணிக்கவாசகர், திருமங்கை மன்னர் வாழ்க்கை வரலாறுகளைக் கூறுவதாகும்.

தமிழ்ப் பெரும் புலவர்:-

கம்பர், திருவள்ளுவர், ஒட்டக்கூத்தர் ஆகியோர் வரலாற்றைக் கூறுவது.

மதுரை வேளாசான்                                   (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊராற் பெயர்பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர். வேளாசான் என்பதனால் வேள்வியியற்றும் ஆசிரியர் என்று கருதலாம்.

நூல் : புறம் 305.