இந
இந்திரரைப் பார்த்துத்தான்
நான் - சாமி
எடுத்து சொல்வேன் தெம்மாங்கைத்தான்.
தெம்மாங்குப் பாட்டுப்பாடிச்
- சாமி
தெருத்தெருவாய்ப்
போய்விட்டாலும்1
என்பவை தெம்மாங்கினிடையே
வருவன. தாலாட்டுப் பாட்டினிடையிலே.
தில்லாலப் பாட்டு என்ன
- கண்மணியே
தெம்மாங்குப் பாட்டு
என்ன2
என்று தெம்மாங்கைக் குறிக்கும்
இடமும் உண்டு.
கலியாணப் பாட்டவுங்க
கனிவாய்த்தான் படிக்கையிலே.3
மாதா மனங்குளிரத் தானுமே
- நல்ல
தாலாட்டுப் பாட்டெல்லாம்
பாடுச்சாண்டி.4
கும்மிப் பாட்டுங் கூடப்பாடி
- ஏலங்கிடிலேலோ
சும்மாட்டைத் தலையில் வைத்து
- ஏலங்கிடிலேலோ.5
கும்மியென்ன கூட்ட மென்ன
- கண்மணியே.6
கும்மி யடிக்கத் தாதி
வேறே.7
முத்தே முத்தேநீ கும்மியடி
- அடி
மோகன முத்தே
கும்மியடி
கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச்
சுக்கட்டும்
கண்ணாடி முத்தே
கும்மியடி.8
கும்மியடிக்கிற பெண்டுகளா
- ஒரு
கோளாறு சொல்கிறேன் கேளுங்கடி.9
கும்மி பாடிக் குப்பம்
வருவாள்
எங்கள் முத்துமாரி.10
என்பவற்றில் கல்யாணப் பாட்டு,
தாலாட்டுப் பாட்டு, கும்மி என்ற வகைகளைக் குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம்.
_________________________________________
1. ப. 15 : 90, 91.
2. 247 : 41.
3. ப. 96 : 76.
4. ப. 321 : 7.
5. ப. 137 : 2.
6. ப. 247 : 40.
7. ப. 251 : 18.
8. ப. 290 : 8.
9. ப. 292 : 4.
10. ப. 312 : 8.
|