ஆறு சக

34

ஆராய்ச்சி உரை

ஆறு சக்கரம் நூறுவண்டி - குட்டி
        அழகான ரெயிலு வண்டி
    மாடுகண்ணு இல்லாமல்தான் - குட்டி
        மாயமாத்தான் ஓடுதடி.1

    இதைப் பாடியவன் மதுரைப் பக்கத்துக்காரன் என்பது தெளிவாகிறதல்லவா?

    கூந்தலுக்கு இலக்கியங்களில் வரும் உவமைகள் பல உண்டு. தெம்மாங்குக்காரன் தான் போகும் சாலையிலே பார்த்த பொருளை உவமை கூறுகிறான்.

ஆலம் விழுதுபோலே - குட்டி
        அந்தப் பிள்ளை தலைமயிரை
    ஆளு ஒண்ணும் பார்க்காமல்தான் - குட்டி
        ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே.2

    ஆலம் விழுதுபோல் இருந்த நெடுங் கூத்தலைச் சுருட்டி முடிந்துகொள்கிறாள் அந்தப் பெண். அந்த முடிச்சுக்கும் ஓர் உவமை சொல்கிறான் அவன், அவனுக்கே உரிய முறையில்; ஆம்; அவன் சொல்லும் உவமையை எந்த இலக்கியப் புலவரும் சொல்லவில்லை.

ஆலம் விழுது போலே
        அந்தப் புள்ளை தலைமயிரு
    தூக்கி முடிஞ்சிட்டாளாம்
        தூக்கணத்தாங் கூடுபோலே.3

    இந்தத் தெம்மாங்குப் பாடல்கள் மதுரைப் பக்கத்தில் வழங்கியவை என்பதற்கு வேறொரு சான்றும் கிடைக்கிறது.

கான மயிலேஉன்னைக் - குட்டி
        கைவிடுவ தில்லையென்று
    மீனாட்சி கோயிலிலே - குட்டி
        வேட்டிபோட்டுத் தாண்டித் தாரேன்.4

    இந்தப் பாடல்களைப் பாடிய காலத்தில் ஈரோடு சாயச் சேலைக்குப் பேர் பெற்றிருந்ததென்று தெரிகிறது. புடவை எவ்வளவு நீளமாக இருந்தாலும் போதவில்லையென்று சொல்லுவது அந்தக்காலத்துப் பெண்களுக்கு இயல்பென்ற இரகசியமும் பின்வரும் தெம்மாங்கினால் புலனாகிறது.
__________________________________________________

1. ப. 5 : 15.                                               

2. ப. 7 : 32.
3. ப. 27 : 169.
4. ப. 12 : 67.