மச
மச்சு வீட்டில் வாழ்பவன்; மல் வேட்டி
கட்டுகிறவன்; சரிகை வேட்டியும் பட்டுச் சட்டையும் அணிபவன்; மாயத் திருட்டு நடத்துகிறவன்; சம்பாச்
சோறு உண்பவன்; ஜட்கா வண்டியில் போகிறவன்; பட்டாக்கத்தி பிடிக்கிறவன்; சிவத்த பெண்ணைக்
கட்டிக்கொண்டவன்; வெள்ளிமிஞ்சி போடுகிறவன்.
கொழுந்து வெற்றிலைதான்
அவன் போடுவது; சரியான தேக்குப் பெட்டியில்தான் அவன் பண்டம் வைப்பது; சந்தனக் கட்டிலில்தான்
படுப்பான்; செம்பகப்பூவை அணிவான்; சாப்புத் தண்ணீர் குடிப்பான்.
வாழையிலையிலே உண்டு ஜப்பான்
பாயிலே படுத்து வைர மோதிரம் அணிந்து தலைச்சவரம் பண்ணிக்கொண்டு ஊற்றுநீரைக் குடிக்கும் ஒய்யார
ஆடவன் அவன். வாட் சண்டை போடுவான்; ஜெயில் கூடத்தில் இருப்பான். அவனிடம் நரிக்கொம்புதான்
இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. போலீஸ் என்றால் அவனுக்கு வேடிக்கை.
பஞ்சம் பிழைக்க ரங்கூனுக்குப்
போன ஒருவன் தான் பட்ட பாட்டையெல்லாம் சொல்லி அழுகிறான். அவன் கதை 32 பாட்டாக அமைந்திருக்கிறது.
சேசு பிறந்த நாளில் ஆடைகள் பெற்றதையும், டங்கன் துரை என்பவன் இல்லை என்னாமல் கொடுத்ததையும்
சொல்கிறான். அந்தத் துரை சின்னப் பெண்ணைக் கண்டால் சேட்டை பண்ணுவானாம்.1
கங்காணிமாரைக் கையிலே போட்டுக் கொண்டு கண்ட இடமெல்லாம் கண்ட கண்ட பெண்ணைக் கையைப்
பிடித்து இழுப்பானாம்.2
பஞ்சம் பிழைக்க ரெங்கோனுக்குப்
போயி
பட்டேனம்மா பாடெல்லாம்
பட்டபாட் டையெல்லாம்
விட்டுச்சொன் னேனுண்ணா
பகவானுக் கேற்கா தம்மா!3
என்று அவன் இரங்குகிறான்.
அதன் பின் வருவது மீனாம்
பாட்டு. வலைஞர் பாடுகிற பாட்டு இது. இதில் ஒவ்வொரு கண்ணிக்கும் பின்,
அண்ணே நன்னே நானே நன்னே
மீனாம்போ
ஏண்டி அப்படி நானே நன்னே
நானே நன்னே இப்போ
என்பது பல்லவிபோல் வருகிறது. பல
செய்திகள் தொடர்பின்றி இப்பாட்டில் வருகின்றன.
_______________________________________________
1. ப. 163 : 26.
2. ப. 163 : 28.
3. ப. 163 : 29.
|