New Page 1
மோருக் கூடையைத் தலையிலே
வைத்து
முத்துக்கம் பிச்சீலைப்
பட்டுடுப்போம்
மோருக் கூடை தளும்பினா
லும்எங்கள்
முத்துக்கம் பிச்சீலை
மங்காது!1
ஒரு பாட்டு. இன்ன இன்ன
ஊரில் இன்ன இன்ன பண்டங்கள் அதிகம் என்பதைச் சொல்லுகிறது.
அவலு பெருத்தது ஆர்க்காடு-நல்ல
வெல்லம் பெருத்தது
வேலூரு
பணம்பெ ருத்த நீலகிரிக்கு-நீங்கள்
பரந்து பாவாடை
போடுங்கடி.2
பின்பு வள்ளியம்மை
கும்மி இருக்கிறது. வேடர்கள் காட்டில் வள்ளியைக் கண்டெடுத்து வளர்க்கிறார்கள். அவள்
வளர்ந்து ‘பெரிய மனுசி’ ஆகிறாள். வேடர்கள் பயிர்செய்த தினைக் கொல்லையை அவள் காவல் செய்தபோது
நாரதமுனிவன் வருகிறான். வள்ளியின் அழகைக்கண்டு அம்முனிவன் அவளை இன்னாளென்று வினவிக் கேட்டுத்
தன்னை இன்னானென்று தெவிக்கிறான். பின்பு, “உன்னைக் காணக் கந்தசாமி காத்திருக்கிறார்”
என்று சொல்கிறான். வள்ளி சினந்து சில சொல்ல, நாரதனும் எதிர் மாற்றம் கொடுக்கிறான்.
பலவிதம் சொல்லியும் வள்ளி இணங்காமையால் அவளைப்போல ஒரு படம் வரைகிறான். வள்ளைத் தண்டைப்போலக்
காதெழுதி அதில் வச்சிரத் தொங்கல் முருகெழுதி, செண்பகப் பூவைப்போல் மூக்கெழுதி அதில்
சிங்கார மூக்குத்தி எழுதுகிறான். செல்வ ராசாத்தி பல் எழுதிப் பின்னே செக்கச் செவேலென்று
உதடு எழுதுகிறான். பின்பு,
கண்ணகி யைப்போலே கண்எழுதிக்
காம ரதிகழுத் தும்எழுதி
கால்கைஎல் லாத்தையும் சேர்த்தெழுதி-அதில்
கெண்டைமீன் தாமரைப்
பூவெழுதி3
எல்லாவற்றையும் எழுதி
முடிக்கிறான்.
கண்ணகியின் வரலாறு தெரிந்தவர்கள்
இந்தப் பாட்டைப் பாடுகிறார்கள். கண்ணகியின் கண் மிக அழகு என்பது இதனால் தெரிய வருகிறது.
கண்ணகை என்று நாடோடிப் பாடல்களில் அவள் பேர் வழங்குவதுண்டு. கண்ணிலே எப்போதும் ஒளியுடையவள்
என்றும், கண்ணிலே சிரிக்கும் பாவம் எப்போதும்
_______________________________________________
1. ப. 292 : 2-3.
2. ப. 293 : 11.
3.
ப. 298 : 34.
|