ஒள
ஒளிரும் என்றும் இருவகையில்
பொருள்கொள்ளலாம். கண்+நகை என்பதற்குக் கண்ணில் ஒளியுடையாள் அல்லது சிரிப்புடையாள் என்று
பொருள் கூறி, ஏழாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக்
கொள்ளலாம். கண்ணகை என்பதே முதலில் உண்டான பெயரென்றும், அது பின்பு மாறிக் கண்ணகியென்று
ஆயிற்றென்றும் ஊகிக்கலாம்.
“சிரித்த பங்கயம் ஒத்த
செங்கண்
இராமனை”1
என்று கண்ணும் சிரிக்கும் அழகைக்
கம்பன் இராமனிடம் பொருத்திக் காட்டுவது இங்கே நினைப்பதற்குரியது.
கண்ணகியைப் போலே கண்எழுதி
என்று வரும் அடி கண்ணகியின் பெயர்க்
காரணத்தை ஊகிக்கத் துணையாக இருப்பது, அறிந்து இன்புறற்குரியது.
நாரதன் தான் எழுதிய படத்தைக்
கந்தனிடம் கொண்டு போய்க் காட்ட அதைப் பார்த்து அப்பெருமான் வள்ளியின்மேல் காதல்கொண்டு,
‘பித்துப் பிடித்த மனிதனைப்போல்’ என்ன என்னவோ பேசுகிறான். எப்படியாவது அவளைத் தேடி மணக்க
வேண்டும் என்று உறுதிகொள்கிறான்.
அவன் முதல் மனைவியாகிய தெய்வயானை
இதனை அறிந்து நாரதனைப் பார்த்து, கண்டபடியாக குடை குடை‘கிறாள்.’2 அவ்விருவருக்கும்
வாக்குவாதம் நிகழ்கிறது. பின்பு முருகன் தெய்வயானையிடம் சொல்லிவிட்டு நாரதன் வழிகாட்ட வேடராசன்
போலக் கோலம் புனைந்து வள்ளியிருக்கும் தினைக் கொல்லைக்குப் போகிறான். போய் வள்ளியிடம்
தன் காதலை உரைக்கிறான்.
வானம்பூ மிதண்ணீர் எல்லாவற்
றுக்கும்நான்
வஞ்சிமார்த் தாண்டன்போல்
ராசாவடி3
என்று தன் பெருமையைச்
சொல்லிக்கொள்கிறான்.
இந்தப் பாட்டைப் பாடியவன்
திருவனந்தபுரம் அரசராகிய மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் இருந்தவனென்பதை இதனால் உய்த்துணரலாம்.
வள்ளி சினந்து பேசுகிறாள்.
ஓடிப்போகச் சொல்கிறாள்.
வம்புக்குச் சண்டை வளர்க்கமாட்டோம்
- ஆனால்
வந்தசண் டையையும்
விடமாட்டோம்
_________________________________________
1. கம்ப கைகேசி சூழ்வினை. 50.
2.
ப. 299 : 44.
3. ப. 302 : 62.
|