ஆத
ஆதியிலே அமைந்த சக்தி
எங்கள் முத்து மாரி
- அம்மா
ஆள்கிறாளாம் பூமியெல்லாம்
சிங்கத்தின்மேல்
ஏறி1
என்று தொடங்குகிறது இந்த நாடோடிப்
பாடல். அவள் இருக்கும் ஊர்கள் பலவற்றை இப் பாடலில் காணலாம். சமயபுரம், கன்னபுரம், புன்னைநல்லூர்,
நார்த்தாமலை, வீராம்-பட்டணம், தாராபுரம், குப்பம், தில்லைநகர், நாச்சியார்கோவில்,
ஒழுகமங்கலம், கணியாக்குறிச்சி, நாகப்பட்டணம், கீரந்தகுடி ஆகிய ஊர்களில் மாரியம்மன் சிறப்பாக
வழிபடப்பெறுவதை இதனால் தெரிந்துகொள்கிறோம்.
ஆதிமக மாயி அவள்
இல்லாத இடம் உண்டா
- இந்தப்
பூமி என்ன ரெண்டா?
அனுதினமும் துதிக்காதவர்
தலைஇரும்புத் துண்டா?2
என்று இந்த முத்துமாரி தாசன் கேட்பதில்
அவனுடைய பக்தியின் மிகுதி புலனாகிறது.
அடுத்தபடி மற்றொரு மாரியம்மன்
பாட்டு வருகிறது. கண்கண்ட தெய்வம் மாரியம்மன்; தாங்க முடியாத அம்மை பூட்டுவாள்; அது நீங்க
வேப்பிலை விபூதி எல்லாம் தருவாள்; ஆயிரங்கண் மாரி இல்லாத இடம் இல்லை; அவளை வழிபடுகிறவர்கள்
காவடி கட்டி வழிபடுவார்கள்; தீச்சட்டி எடுப்பார்கள் - என்ற செய்திகள் இதில் உள்ளன.
பூசாரிப் பாட்டுப்
பின்பு இருக்கிறது. பூசாரி ஓம் என்றும் ஆம் என்றும் உச்சரிக்கிறான். மயான ருத்ரி முதலிய பல
தெய்வங்களை அழைக்கிறான்.
பின்பு வரும் கரகப் பாட்டில்
ஒன்று முதல் பத்துக் கரகங்களைச் சொல்லும் கண்ணிகள் உள்ளன.
பத்துஞ்சொல்லி முடிந்ததடி
கன்னி - ஓகோ என்தாயே
பத்தினிஉன் வாசலிலே இப்போ3
என்று இந்தப் பாட்டு
முடிவுபெறுகிறது.
இதன் பின் ஆதாம் ஏவாள்
கதையையும் ஏசு சரிதையையும் சொல்லும் கும்மிகள் இருக்கின்றன.
__________________________________________
1. ப. 311 : 1.
2. ப. 313 : 19.
3. ப. 318 : 11.
|