7

70

ஆராய்ச்சி உரை

7. மாட்டு வகை

    வேளாண்மையையே முக்கியத் தொழிலாகப் பெற்ற தமிழர் வாழ்வில் மாடுகள் இன்றியமையாதன. அவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் இயல்புள்ளவர் தமிழர். பலவகை மாடுகளை அவர்கள் அறிவார்கள்.

கருப்புக் காளை

நின்று குத்திக் காளை

காட்டு மாடு

பில்லைக் காளை

காராம் பசு

புள்ளி மாடு

குள்ளிமாடு

மயிலைக் காளை

கூடுகொம்புக் காளை 

மரைக் காளை

கொம்புக் காளை

விரிகொம்புக் காளை

சிவத்த காளை

வெள்ளைக் காளை

செவலைக் காளை

 

8. மீன் வகை

    ஆற்றிலும், குளத்திலும், கடலிலும் பலவகை மீன்கள் வாழ்கின்றன. வலைஞர் பாடும் பாடல்களில் அவற்றின் பெயர்களைக் காணலாம்.

அயிரை மீன் 

கெளுத்தி மீன்

ஆரால் மீன்

பரவை மீன்

குரவை மீன்

வழலை மீன்

கெண்டை மீன்    

வாளை மீன்

9. பழக்க வழக்கங்கள்

    இலக்கியங்களில் காணாத பல செய்திகள் நாடோடிப் பாடல்களில் வருகின்றன. வாழ்க்கையின் பல கோணங்களையும் நெருங்கிக் கண்ட நாடோடிக் கவிஞன் தான் கண்டதைக் கண்டபடி சொல்லுகிறான். அவன் பாட்டில் சமுதாயத்தில் உள்ள பல பழக்க வழக்கங்களைக் காணுகிறோம். இடத்திற்கும் வகுப்பிற்கும், காலத்திற்கும்ஏற்ப இவை வேறுவேறாக இருக்கும்.

    கீழே வரும் அகராதியில் பழக்க வழக்கங்களோடு பல செயல்களும், சில விலங்கினங்களின் செய்கைகளும் காணப்படும். எண்கள், பக்க எண்களைக் குறிப்பவை.