பக்கம் எண் :

New Page 1

16

மலையருவி

தெம்மாங்குப் பாட்டுப்பாடிச் - சாமி
        தெருத்தெருவாய்ப் போய்விட்டாலும்

    அன்பான வார்த்தைசொல்லிச் - சாமி
        அழைக்கத்தானும் நாதியில்லை.
                 

91

ஆழக் கரையிலேதான் - அடி
        அழகான கல்புதைத்து

    நீளக் கரையிலேதான் - அடி
        நின்றடிக்கும் வண்ணாத்தியே.
                

92

கசக்க அறுபதுநாள் - அடி
        கஞ்சிபோட முப்பதுநாள்

    தூக்கியடிக்கத் தொண்ணூறுநாள் - அடி
        தோய்ச்சுப்போட முந்நூறுநாள்.
              

93

வடிவா வடிவழகா - மாமா
        வட்டமிட்ட பொட்டழகா

    சாய்ந்த நடையழகா - மாமா
        சந்தனப் பொட்டழகா. 
                   

94

உன்னைநான் விடுவதில்லை - மாமா
        ஒருத்தர்முகம் பார்ப்பதில்லை

    என்னஎன்ன நீதருவாய் - மாமா
        என்னைவச்சு ஆதரிக்க?                    

95

அத்திமர மானேனேநான் - குட்டி
        அத்தனையும் பிஞ்சானேனே

    நத்திவரும் பொண்களுக்குக் - குட்டி
        முத்துச்சரம் நானானேனே. 
                  

96

கோட்டைக்குள்ளே கொடியிருக்கு - குட்டி
        கொடியைச்சுற்றிப் பழமிருக்கு

    சீமையாளும் ராசாவுக்குக் - குட்டி
        சிங்கக்கொடி தானிருக்கு.
      

97