க
காளி சிலையைக் கணக்கா
வரைந்துதான்
கல்லிலடிக்கச்
சொன்னான்
கல்லுருட்டித் திரட்டி அடிக்கையிலே
காலை ஒடிச்சுக்கிட்டேன்.
2
வீட்டுக்கு மூலைக் கல்லடிக்
கச்சொன்னான்
வீடெல்லாம் கட்டச்சொன்னான்
வீட்டிலே குற்றங் குறையிருந்த
தாலே
வீசினான் சாட்டையாலே.
3
கோடிகோ டிக்கல்லு கொண்டா
ரச்சொன்னான்
குறுக்குக்கல் அடிக்கச்சொன்னான்
குறுக்குக்கல் குட்டையாப்
போனத னாலே
கொடுத்தானே கன்னத்திலே.
4
நிலைக்குமந் தாங்கியெல்
லாமடிக்கச் சொன்னான்
நிலையள வெல்லாஞ்சொன்னான்
நேராஎல் லாத்தையும்
பிளக்கா ததனாலே
நிமிர்த்தினான் குச்சியிலே.
5
மூலமட் டத்தைக்கல் மேலேவைக்
கச்சொன்னான்
முலைவ
ருவச்சொன்னான்
மூலையி லேகொஞ்சம் கோணினத
னாலே
மூஞ்சிபோச் சொருகுத்திலே.
6
சொல்லா வரட்டிச்
சொகுசா நடக்கிறான்
பல்லாயி ரந்தச்சன்தான்
எல்லாக்கல் தச்சனும் நல்லாப்பே
சையிலே
எனக்கே னடிமுதுகிலே.
7
ரோதைஓ டையிலே காதைவைச்
சுக்கேட்டேன்
ரோதை போட்ட சத்தத்தைப்
பாதிஓ டையிலே பாதகன்
பண்டாரம்
பக்கென் றுதைத்தான்என்னை.
8
|