ம
மார்கழி மாசம் இருபத்தஞ்
சாந்தேதி
மகராசன் தோட்டத்திலே
தேரு திருவிழா கொட்டு முழக்கென்ன
சேசு பிறந்ததாலே.
23
சேசு பிறந்தாரு கேசுந் துறந்தாரு
பீசுங் கிழிச்சாரம்மா
கண்டாங்கிச் சீலையும்
கலருப்பா வாடையும்
கணக்கில் அடங்காதம்மா.
24
புள்ளைபெற் றால்வெள்ளி
புள்ளைசெத் தால்வெள்ளி
புண்ணியன் டங்கன்துரை
இல்லையென் னாமே கொடுத்தா
தரிச்சாலும்
இஷ்டம்போல் உதைகொடுப்பான்.
25
ராத்திரி வேலைக்கு ராச்சம்
பளம்வேறே
ராசாஎன் டங்கன்துரை
சேத்துக் கொடுத்தாலும் சேட்டைபண்
ணுவாரே
சின்னப்பெண் ணைக்கண்டுட்டால்.
26
காலுச்சட் டைபோட்டுக் கையைஉள்
ளேவிட்டுக்
கண்ணைநல் லாச்சிமிட்டிக்
கங்காணி மாரைத்தான் கைக்குள்ளே
தான்போட்டுக்
காசு களையிறைச்சு.
27
காடுண்ணு மில்லை மேடுண்ணு
மில்லை
வீடுண்ணும் இல்லையம்மா
கண்ட இடமெல்லாம் கண்டகண்ட
பொண்ணைக்
கையைப் பிடிச்சிழுப்பார்.
28
பஞ்சம் பிழைக்க ரெங்கோனுக்
குப்போயி
பட்டேனம் மாபாடெல்லாம்
பட்டபாட் டையெல்லாம்
விட்டுச்சொன் னேனுண்ணா
பகவானுக் கேற்காதம்மா.
29
______________________________________________________
23. சேசு - ஏசு கிறிஸ்து.
24. கலரு - Colour.
|