பக்கம் எண் :

9

தொழிலாளர் பாட்டு

165

9. தூக்கிவந்து போடுங்கடி மீனாம்போ - ஏண்டிஅப்படி
  தொங்குகொண்டைக் காரனுக்கு இப்போ    (அன்னே)

10. சோறுபொங்கி ஆறுதடி மீனாம்போ - ஏண்டிஅப்படி
   தண்ணிவைத்துக் காயுதடி இப்போ        (அன்னே)

11. வாறேனென்று போனமன்னன் மீனாம்போ - ஏண்டிஅப்படி
   இன்னம்வரக் காணலையே இப்போ        (அன்னே)

12. வெள்ளிநல்லா விடியவேணும் மீனாம்போ - ஏண்டிஅப்படி
   விடியக்காலம் ஆகவேணும் இப்போ       (அன்னே)

13. வட்டப்பொட்டு வைக்காதடா மீனாம்போ - ஏண்டிஅப்படி
   வாசல்வழி வராதேடா இப்போ (அன்னே)

14. வாழாத பெண்களுக்கு மீனாம்போ - ஏண்டிஅப்படி
   வார்த்தைக்கடன் வைக்காதேடா இப்போ    (அன்னே)

15. சாய்ந்தகொண்டை போடாதேடா மீனாம்போ -
                                   ஏண்டிஅப்படி
   சாலைவழி வராதேடா இப்போ        (அன்னே)

16. தாளாத பெண்ணாளை மீனாம்போ - ஏண்டிஅப்படி
   சங்கத்திலே வைக்காதேடா இப்போ         (அன்னே)

17. தொங்குகொண்டை போடாதேடா மீனாம்போ -
                                  ஏண்டிஅப்படி
   ஊர்வழி வராதேடா இப்போ          (அன்னே)

18. பிழையாத பெண்ணாளுக்கு மீனாம்போ - ஏண்டிஅப்படி
   பொல்லாப்புச் சொல்லாதேடா இப்போ       (அன்னே)

19. மண்ணை நிரவிவிட்டு மீனாம்போ - ஏண்டிஅப்படி
   மருக்கொழுந்து நாற்றுவச்சு இப்போ         (அன்னே)

20. கிள்ளத் தெரியாமல் மீனாம்போ - ஏண்டிஅப்படி
   கிளிகள்வந்து உராஞ்சுதடி இப்போ          (அன்னே)

21. கிழக்கே மழைபெய்ய மீனாம்போ - ஏண்டிஅப்படி
   கீரை அறுக்கையிலே இப்போ         (அன்னே)

22. பயனை நினைக்கையிலே மீனாம்போ - ஏண்டிஅப்படி
   பட்டுடுத்தே பொன்னரிவாள் இப்போ        (அன்னே)

_____________________________________________________

    22. பட்டுடுத்தே - பட்டுவிட்டதே.