பக்கம் எண் :

ஆழம

கள்ளன் பாட்டு

187

ஆழமான ஆற்றையெல்லாம்
        ஆனைபுலி கரடியெல்லாம்
    அஞ்சாமல்தான் நம்பலாம்
        ஆனால் பதினாறுமுழச்
            சீலைக்காரி பத்திரம் - அப்பா
            சீலைக்காரி பத்திரம்.

56

வெற்றிலை மடித்துக்கொடுப்பாள்
        வெறும்பேச்செல்லாம் பேசுவாள்
    கூடச்சாகி றேனென்னுவாள்
        கூந்தலை விரித்துப்போட்டு
            ஏமாந்து மோசம்போகாதே - தம்பி
            ஏமாந்து மோசம் போகாதே.

57

_______

கள்ளன் பாட்டு

தந்தானமடி தந்தானமடி
        தந்தானக் குயிலே - மயிலே
        தந்தானக் குயிலே - மயிலே
        தந்தானக் குயிலே.

1

 தந்தானென்கிற பாட்டுப்பாடி
        வந்தேன் சபையிலே - அப்பாடா
        வந்தேன் சபையிலே - அப்பாடா
        வந்தேன் சபையிலே.
 

2

கோட்டைகொத்தளம் மேலேஏறி
        கூசாமே ஓடிடுவேன் - அப்பாடா
        கூசாமே ஓடிடுவேன் - அப்பாடா
        கூசாமே ஓடிடுவேன்.

3

கொத்தவால் கண்டு பிடிக்கவந்தால்
        காலை வெட்டிடுவேன்
        கையை வெட்டிடுவேன் - கூடஒரு
        கையை வெட்டிடுவேன்.
  

4