பக்கம் எண் :

ஆத

தெம்மாங்கு

19

ஆத்திலே ஊத்துப்பாரு
        அவன்போற நேர்த்திபாரு

    முக்காத்துட்டுக் கொப்பைப்பாரு
        முக்காட்டையும் சேர்த்துப்பாரு.                

112

தண்டட்டி போட்டபிள்ளை
        தானே வளர்ந்தபிள்ளை

    கட்டிக் கொடுக்கலேண்ணு
        முட்டிமுட்டி அழுகிறாளே.
                     

113

எட்டையா புரத்திலேயும்
        எட்டுநாள் பாவைக்கூத்து

    பாவைக்கூத்துப் பார்க்கப்போய்ப்
        பசுங்கிளியைத் தப்பவிட்டேன்.
     

114

எட்டையா புரத்திலேயும்
        நட்டுவச்ச தென்னந்தோப்பு

    மகராசன் தென்னந்தோப்பில்
        மயில்வந்து மேய்ந்தடையும்.                  

115

சிவகிரி ராசாநம்ம
        செல்லத் துரைபாண்டியா

    எங்கும்புகழ் பெற்ற எங்கள்
        இரக்கமுள் ளதுரையே.
                

116

கச்சேரி வாசலிலே
        லட்சம்பேரு நிற்கையிலே

    கறுத்தசாமி இல்லாமே
        களையும் பொருந்தவில்லை.
             

117

கச்சேரி கண்டபிள்ளை
        கையெழுத்துப் போட்டபிள்ளை

    போலீசு கண்டபிள்ளை
        போதுமடி உன்உறவு.
                  

118