எண
எண்டப்புள்ளி ரோட்டிலேநான்
எக்குத்தப்பாப் பட்டபாட்டை
என்றைக்கும் மறக்கமாட்டேன்
என்னைக்கேலி பண்ணாதடி
தாடிப்பத்திரிச் சீலை -
இழுத்துப்போத்தடி மேலே.
21
_______
வேறு
பறங்கிமலை பல்லாவரம்
பன்றி மேய்ச்சவனே
- லோட்டா
கூழ்குடிச்சவனே - துண்டு
பீடி அடிச்சவனே.
1
சீப்புவிற்கும் சென்னையிலே
பறக்குதே கருடன் -
உலகத்திலே
ஆறாம்நம்பர் திருடன்
- பாடவந்த
கண்தெரியாக்
குருடன்.
2
கள்ளப்பாட்டுக் கற்றுக்கொண்டு
கணக்கா வந்தேனே -
கன்னக்கோலைக்
கையில் எடுத்தேனே -
கட்டிடத்தை
நாசம் செய்தேனே.
3
கன்னக்கோலைக் கையில்எடுத்தால்
கட்டிடம் நாசம் - டெலிபோன்
என்னோ டேபேசும் -
போலீசு
என்மேலே நேசம.்
4
கத்திக்குத்து பாணாவந்தால்
கைதேர்ந்த கேடி - சென்னையிலே
பேர்போன ரவுடி - வந்தாலும்
ஜெயிப்பேன் கில்லேடி.
5
|