பக்கம் எண் :

எண

192

மலையருவி

 எண்டப்புள்ளி ரோட்டிலேநான்
        எக்குத்தப்பாப் பட்டபாட்டை
    என்றைக்கும் மறக்கமாட்டேன்
        என்னைக்கேலி பண்ணாதடி
    தாடிப்பத்திரிச் சீலை - இழுத்துப்போத்தடி மேலே.       
  

21

_______

வேறு

பறங்கிமலை பல்லாவரம்
        பன்றி மேய்ச்சவனே - லோட்டா
        கூழ்குடிச்சவனே - துண்டு
        பீடி அடிச்சவனே.

1

சீப்புவிற்கும் சென்னையிலே
        பறக்குதே கருடன் - உலகத்திலே
        ஆறாம்நம்பர் திருடன் - பாடவந்த
        கண்தெரியாக் குருடன்.

2

கள்ளப்பாட்டுக் கற்றுக்கொண்டு
        கணக்கா வந்தேனே - கன்னக்கோலைக்
        கையில் எடுத்தேனே - கட்டிடத்தை
        நாசம் செய்தேனே.
      

3

கன்னக்கோலைக் கையில்எடுத்தால்
        கட்டிடம் நாசம் - டெலிபோன்
        என்னோ டேபேசும் - போலீசு
        என்மேலே நேசம.்

4

கத்திக்குத்து பாணாவந்தால்
        கைதேர்ந்த கேடி - சென்னையிலே
        பேர்போன ரவுடி - வந்தாலும்
        ஜெயிப்பேன் கில்லேடி.

5