பக்கம் எண் :

வண

கள்ளன் பாட்டு

193

வண்ணாரப்பேட்டையில் கிண்ணாரம்வாசிக்கும்
        பண்டாரக் கேசவலே - என்கூடப்
        பாடும் சவ்வாலே - மரத்திலே
        தொங்கும் வௌவாலே.

6

தஞ்சாவூரு கோவிந்தனுக்குத்
        தலைமேலே செம்பு - கையிலே
        அரைபாணாக் கம்பு - எதிராளி
        பறக்குதே கும்பு.

7

மானாமதுரை மகராஜன்ராத்திரி
        ஒருமணி தேட்டை - என்னைக்கண்டு
        சிரிக்குது மூட்டை வாயெடுத்துப்
        படிப்பனே பாட்டை.  
                     

8

போட்டாபோட்டிக்கு வந்தவனைப்
        பொம்பரம் போலாட்டி - மெத்தைமேலே
        சிங்கக்கொடி நாட்டிச் - செய்யப்போறேன்
        செரியான கோஷ்டி.

9

கள்ளனென்று வெளியேவந்தால்
        முகத்திலே கறுப்பு - நம்கிட்டே
        பண்ணாதே முறைப்பு - தொங்கிப்போகும்
        அஞ்சுபலம் துறப்பு.

10

முந்திப்பிந்திப் பேசினையென்றால்
        ஏறுவேன் ரெயிலு - பின்னாலே
        வருகுதே மெயிலு - ஓசையிட்டுக்
        கூவுதே குயிலு.

11

________