ஆத
ஆத்திலேயும் குளத்திலேயும்
வாய்க்கால்ஓ ரத்திலேயும்
காத்திருந்து பொண்ணுகளைக்
கலக்கி மயக்கலையோ?
3
பார்த்துப்பார்த்து அவங்களைப்
பரியாசம் பண்ணலையோ
ஊத்துப்பக்கம் நீங்கள்போயி
உட்கார்ந்து பார்க்கலையோ?
4
மண்டை வறண்டவருக்கு
மச்சினிச்சி
மார்களாச்சு
மண்வெட்டிப் பல்லருக்கு
மாமியாரும் கிடைச்சுப்போச்சு.
5
புண்ணாக்கும் புளியம்பிஞ்சும்
மல்லாக்கொட்டையும்
தின்னவருக்குக்
கண்மணிஎங்கள் அக்காகிட்டக்
கணக்காச் சாப்பாடுமாச்சு.
6
காட்டிலேபோய் மாடுமேச்சுக்
கஞ்சிகுடித்த அத்தான்
கட்டிலிலே மெத்தைபோட்டு
இங்கேவந்து படுக்கணுமோ?
7
முன்பிறப்பி லேசெஞ்ச
மோசமான வேலைக்காக
இப்பிறப்பிலே எங்கஅக்கா
இப்படித் தவிக்கிறாளே.
8
அக்காளைக் கூட்டிக்கிட்டு
வற்றாத சீர்பெற்றார்
நாகரிகம் அவருக்கில்லை
நாட்டுப்புற வழக்கத்திலே.
9
|