பக்கம் எண் :

ஆத

198

மலையருவி

ஆத்திலேயும் குளத்திலேயும்
        வாய்க்கால்ஓ ரத்திலேயும்
    காத்திருந்து பொண்ணுகளைக்
        கலக்கி மயக்கலையோ?
        

3

பார்த்துப்பார்த்து அவங்களைப்
        பரியாசம் பண்ணலையோ
    ஊத்துப்பக்கம் நீங்கள்போயி
        உட்கார்ந்து பார்க்கலையோ?
        

4

மண்டை வறண்டவருக்கு
        மச்சினிச்சி மார்களாச்சு
    மண்வெட்டிப் பல்லருக்கு
        மாமியாரும் கிடைச்சுப்போச்சு.

5

புண்ணாக்கும் புளியம்பிஞ்சும்
        மல்லாக்கொட்டையும் தின்னவருக்குக்
    கண்மணிஎங்கள் அக்காகிட்டக்
        கணக்காச் சாப்பாடுமாச்சு.

6

காட்டிலேபோய் மாடுமேச்சுக்
        கஞ்சிகுடித்த அத்தான்
    கட்டிலிலே மெத்தைபோட்டு
        இங்கேவந்து படுக்கணுமோ?
            

7

முன்பிறப்பி லேசெஞ்ச
        மோசமான வேலைக்காக
    இப்பிறப்பிலே எங்கஅக்கா
        இப்படித் தவிக்கிறாளே.

8

அக்காளைக் கூட்டிக்கிட்டு
        வற்றாத சீர்பெற்றார்
    நாகரிகம் அவருக்கில்லை

        நாட்டுப்புற வழக்கத்திலே.                    

9