பல
பல்வரிசைக் காரியேடி -
சுண்டெலிப்பெண்ணே
பழிஇழுத்துப் போடாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
24
குறுங்கழுத்துக் காரியேடி -
சுண்டெலிப்பெண்ணே
கோள்குண்டுணி சொல்லாதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
25
ரதிமாருக் காரியடி -
சுண்டெலிப்பெண்ணே
ராங்கியோடு நிற்காதேடி
- சுண்டெலிப்பெண்ணே.
26
வழியில்போற வாலிபனைச்
-
சுண்டெலிப்பெண்ணே
வம்பாக்கூப்பிட்டுப் பேசாதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
27
சொல்லழகில் நீதாண்டி -
சுண்டெலிப்பெண்ணே
தோற்கவைப்பை எல்லாப்பெண்ணையும்
-
சுண்டெலிப்பெண்ணே.
28
அதனாலேநீ அளவுக்குமிஞ்சி
-
சுண்டெலிப்பெண்ணே
ஆங்காரம் படைக்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
29
உன்நடையும் கைவீச்சும் -
சுண்டெலிப்பெண்ணே
உசத்தியிண்ணு நினைக்காதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
30
விருந்தும்மருந்தும் மூணுநாள்
-
சுண்டெலிப்பெண்ணே
வீண்பீற்றலெல்லாம் பீற்றாதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
31
கழுத்தில்தாலி
இருக்கும்போது -
சுண்டெலிப்பெண்ணே
கண்டவனைப் பார்க்காதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
32
|