பக்கம் எண் :

New Page 1

குடும்பம்

205

கொண்டவன் உசிராயிருக்கையில் -
சுண்டெலிப்பெண்ணே
    கண்டவன்கூடப் பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.  
  

33

கொண்டவன்நல்லாப் பார்க்கையிலே -
சுண்டெலிப்பெண்ணே
    ரெண்டகம்நீ செய்யாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.     

34

கல்லுண்ணாலும் கணவனடி -
சுண்டெலிப்பெண்ணே
    புல்லுண்ணாலும் புருசனடி -
சுண்டெலிப்பெண்ணே.     

35

நாயம் பண்ணினாலும் இல்லையிண்ணாலும் -
சுண்டெலிப்பெண்ணே
    நான்சொல்றதைக் கேட்டுக்கோடி -
சுண்டெலிப்பெண்ணே.     

36

காலையிலே எளுந்திரிச்சுச் - சுண்டெலிப்பெண்ணே
    வாசலுக்குச் சாணிபோடு - சுண்டெலிப்பெண்ணே.     
   

37

சட்டிபானை லொட்டுலொசுக்கு -
சுண்டெலிப்பெண்ணே
    சகலத்தையும் கழுவிவை -    சுண்டெலிப்பெண்ணே.     

38

செம்புபித்தளைப் பாத்திரங்களைச் -
சுண்டெலிப்பெண்ணே
    செம்மையா விளக்கிவை - சுண்டெலிப்பெண்ணே.         

39

வெள்ளிசெவ்வாய்க் கிழமையிலே -
சுண்டெலிப்பெண்ணே
    வீடுபூரா மெழுகணுண்டி - சுண்டெலிப்பெண்ணே.    
    

40

ஆடிஅமா வாசையிலே - சுண்டெலிப்பெண்ணே
    ஆண்டவனைக் கும்பிடணும் -
சுண்டெலிப்பெண்ணே.
    

41