பக்கம் எண் :

206

மலையருவி

காடுகரை வீடுவாசல் - சுண்டெலிப்பெண்ணே
    கவலையாநீ கவனிக்கணும் - சுண்டெலிப்பெண்ணே.         

42

கிழிஞ்சுபோன கந்தலைக்கூடச் -
சுண்டெலிப்பெண்ணே
    எறிஞ்சிடாமே தைக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.     

43

செல்லாத காசைக்கூடச் - சுண்டெலிப்பெண்ணே
    செல்வமா நினைச்சுவை - சுண்டெலிப்பெண்ணே.         

44

லெச்சுமிவீடு தங்கணுண்ணா - சுண்டெலிப்பெண்ணே
    எச்சியைவீட்டில் துப்பாதடி -
சுண்டெலிப்பெண்ணே.     

45

கார்த்திகை தீபாவளியிலே - சுண்டெலிப்பெண்ணே
    கடவுளைநீ கும்பிடணும் - சுண்டெலிப்பெண்ணே.         

46

சூடம்சாம்பி ராணிபோட்டு - சுண்டெலிப்பெண்ணே
    சொக்கநாதரைக் கும்பிடடி -
சுண்டெலிப்பெண்ணே.     

47

கைகாலெல்லாம் சுத்தம்பண்ணி -
சுண்டெலிப்பெண்ணே
    கந்தசாமியைக் கும்பிடடி - சுண்டெலிப்பெண்ணே.         

48

மாரியாத்தாளையும் காளியாத்தாளையும்
சுண்டெலிப்பெண்ணே
    மறந்திடாமே கும்பிடடி - சுண்டெலிப்பெண்ணே.         

49

மச்சான்கொழுந்தன் மாருக்கெல்லாம் -
சுண்டெலிப்பெண்ணே
    மரியாதை கொடுக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.     

50

மாமன் மாமியாள் ரெண்டுபேரையும் -
சுண்டெலிப்பெண்ணே
    மேன்மையா நடத்தணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.     

51