அண
அண்ணன்தம்பி மாரைநீ -
சுண்டெலிப்பெண்ணே
அரவணைச்சுப் பார்க்கணுண்டி
-
சுண்டெலிப்பெண்ணே.
52
அன்னியரையும் அடுத்தவரையும்
-
சுண்டெலிப்பெண்ணே
அன்பா ஆதரிக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.
53
பிச்சைகொடுக்க ணும்னாக்கூடச்
-
சுண்டெலிப்பெண்ணே
பட்சமாக் கொடுக்கணுண்டி
-
சுண்டெலிப்பெண்ணே.
54
மஞ்சள்குளிச்சு கொண்டைப்பூவச்சுச்
-
சுண்டெலிப்பெண்ணே
மனிசரை மயக்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
55
பட்சபாதம் ஒண்ணும்இல்லாமே
-
சுண்டெலிப்பெண்ணே
பகுந்தாகாரம் கொடுக்கணுண்டி
-
சுண்டெலிப்பெண்ணே.
56
ஏழைபாழை ஏதுங்கேட்டால்
-
சுண்டெலிப்பெண்ணே
எடுத்தெரிந்து பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
57
தர்மம் தலைகாக்குண்டி -
சுண்டெலிப்பெண்ணே
தயவைக்கை விடாதேடிநீ -
சுண்டெலிப்பெண்ணே.
58
தர்மம்செஞ்ச வேடனடி -
சுண்டெலிப்பெண்ணே
தர்மராசா வாப்பிறந்தான்
-
சுண்டெலிப்பெண்ணே.
59
ஆறிலேயும் சாவுதாண்டி -
சுண்டெலிப்பெண்ணே
நூறிலேயும் சாவுதாண்டி -
சுண்டெலிப்பெண்ணே.
60
|