பக்கம் எண் :

அந

208

மலையருவி

அநியாயமா ஆளுகளைச் - சுண்டெலிப்பெண்ணே
    அடிச்சு விரட்டாதேடிநீ - சுண்டெலிப்பெண்ணே.         

61

ஊரார்பிள்ளையை ஊட்டிவளர்த்தால் -
சுண்டெலிப்பெண்ணே
    உன்பிள்ளை தானாய்வளரும் -
சுண்டெலிப்பெண்ணே.     

62

காராம்பசுவைப் போலேநீ -
சுண்டெலிப்பெண்ணே
    கடவுளுக்கு உகந்துநட - சுண்டெலிப்பெண்ணே.         

63

_______

மாமியார் மருமகள் சண்டை

மாமியாள் :   தடிச்சிறுக்கி உடல்
               வளையாத மடச்சிறுக்கி
           கடைபொறுக்கி கெட்ட
           தறுதலைச் சிறுக்கி.                 

1

சட்டிகழுவத் தெரியாத
               சாகசக்கார மட்டிநாயே
           எட்டி உதைப்பேன்
           எழுந்திரடி ஈனநாயே.

2

கெட்டிக் காரியடிநீ
           கேடுகெட்ட சாதிநாயே
           தட்டுவேண்டி பல்லை
           தட்டுவாணி பெற்றநாயே.

3

ஏறிப்போச்சோ பையன்
           கொடுத்த கொழுப்புனக்கு
           எழுந்திரடி அடி
           மதம்பிடிச்ச தேவடியாள்.
  

4