பக்கம் எண் :

மந

குடும்பம்

209

மந்திபோல ஏண்டிநீ
        இன்னம்தூங்கிக் கிட்டிருக்கே
    வந்தேண்ணா பாத்துக்கடி
            வள்ளலெல்லாம் இறக்கிடுவேன்.
       

5

குந்தக்குந்தப் பிடிச்சுத்தள்ளிக்
        குமுகுமுன்னு உதைச்சிடுவேன்
    எந்தமாமி உன்னைக்கட்டி
            மாரடிச்சிக் கிட்டிருப்பா.

6

     இந்தியாவில் எங்கேயானாலும்
        போய்க்கொஞ்சம் பார்த்துவாடி
    ஏண்டிஎகத்தாளமாப் பார்க்கிறாய்
        தோண்டிடுவேன் உன்கண்ரெண்டையும்.     

7

மருமகள் : அத்தைஎன்னை அடிக்காதே
                அடிபணிவேன் நான்உனக்கு
          மெத்தஎன்னை மிரட்டாதே
                சுத்தபுண்ணியம் உனக்கு.         
       

8

சுத்தமான வேலைசெய்வேன்
                கற்றுக்கொடு நீஎனக்குப்
           பத்திரமா வீட்டுவேலை
                பார்த்துச்செய்வேன் நான்உனக்கு.

9

அத்தை அடிஎங்கள்
                அப்பன்கூட வேபிறந்த
           அத்தை அடிஒரு
                முத்தங்கூடக் கொடுக்கிறேண்டி.

10

அத்தைஎன்னை வையாதே
                அநியாயமாய்த் திட்டாதே
           குற்றம்ஒண்ணும் செய்யலையே
                குந்திக்கிட்டு ஏன்இருக்கே?

11