பக்கம் எண் :

ஒத

210

மலையருவி

ஒத்தையிலே நான்இருக்கேன்
        உதவிக்கொருத்தர் கூடஇல்லை
    உன்மகன் கூடஎன்னை
            ஓடிஓடி அடிக்கிறாரு.

12

என்னசெய் வேன்நானு
        ஏதுசெய்வேன் அத்தை
    சொன்னசொல்லை எல்லாம்
        தட்டாமல்செய்வேன் அத்தை.

13

மாமியாள் : எதிர்த்துச்சும்மா பேசாதேடி
                இழுத்துப்போட்டு உதைப்பேண்டி
           குதிச்சுச்சும்மா ஆடாதேடி
                கும்மாங்குத்துக் கொடுப்பேண்டி       
      

14

பதைக்குதடி கைகாலு
                பாதகிஇப்போ பாரடி
           வதைக்கிறேண்டி பாருஇப்போ
                வாயைஉட னேமூடுடி.
 

15

வாதாடா தேஉன்
                சூதெல்லாம்நான் பார்க்கிறேன்
           சாகாம லேஉன்
                சதையெல்லாம் வகுந்திடுவேன்.

16

என்ன திமிரடிஇது
                எங்கே படிச்சைஇது
           சொன்னசொல்லெல் லாம்உனக்குச்
                சோதிக்கலை யாகழுதை?

    17

கன்னத்தைத் திருகிடுவேன்
                கடிச்சிடுவேன் உன்காதை
           தின்னத்தீனி வேணுமா
                திருடிபெற்ற குட்டிக்கழுதே.

18