பக்கம் எண் :

New Page 1

தெம்மாங்கு

21

வெள்ளிப் பிடியரிவாள்
        விடலைப்பிள்ளை கையரிவாள்

    சொல்லி அடிச்சரிவாள்
        சுழற்றுதடா நெல்கதிரை.                    

126

சாரட்டு வண்டிக்காரா
        சலங்கைபோட்ட மாட்டுக்காரா

    மாட்டை விரட்டாதேடா
        நான்தாரேன் கேட்டுக்காசு. 
                   

127

வெள்ளாடு மேய்க்கமாட்டேன்
        வேனிலிலே நிற்கமாட்டேன்

    கம்பங்காடு காக்கச்சொன்னால்
        காட்டைவிட்டுப் போகமாட்டேன்.
    

128

நத்தத்து ரோட்டுவழி
        நான்போறேன் ஒத்தைவழி

    மின்னிட்டாம் பூச்சிபோலே
        முன்னேவாடி பொன்மயிலே.                

129

ஆட்டுக்காரா மாட்டுக்காரா
        அடைமழைக்கு எங்கிருந்தாய்?

    குறும்பன்கம் பிளிக்குள்ளே
        குறுகிக்கிட்டு நான்இருந்தேன்.
                

130

ஆல மரம்உறங்க
        அடிமரத்துக் கிளிஉறங்க

    உன்மடிமேல் நான்உறங்க
        உலகம் பொறுக்கலையே.  
                  

131

பொட்டலிலே கிணறுவெட்டிப்   
        பொறுக்குக்காளை ரெண்டும்பூட்டி

    காப்புப்போட்ட கறுத்தமச்சான்
        கமலைபூட்டத் தெரியலையே. 
              

132