பக்கம் எண் :

குடும்பம்

213

மருமகள் : சும்மாவா யாடாதேமெத்தச்
                சொன்னேண்டி அத்தை
          . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . .
    

35

நங்குபண் ணாதடி
                நாயைப்போல் குலைக்காதடி
          நம்மடி பொல்லாதஅடி
                நாட்டுப் புறத்தடி.
            

36

உன்னையும் உன்பிள்ளையையும்
                ஒருதூணி லேகட்டி
          உலக்கையால் இடிச்சிடுவேன்
                தெரியு மாடி?

37

என்னைநீ யாருண்ணு
                நினைச்சுக்கிட் டிருக்கிறே
          எட்டிஉதைப் பேண்டிஅத்தை
கடலு நத்தை.
 

38

தேவடியா கிழச்சிறுக்கி
                தேம்பிஏண்டி அழுகிறே
          மாவிடிக் கிறாயாஇல்லையா
                நான்தாண்டி இப்போமாமியா.

39

செக்குஇனிச் செல்லாதடி
                பக்குவமாப் பிழைச்சுக்கோடி
          மொச்சைக்கொட்டை வாங்கித்
                தாரேண்டி கொரிச்சுக்கோடி.         
   

40

மூலையிலே உட்காரடி
                முக்காட்டைப் போட்டுக்கோடி
          பல்லில்லாத கிழடி
                பட்டாணி வேணுமாடி?

41

ஓட்டைப்பாய் தாரேண்டி
உட்காருடி உன்பாட்டிலே
          பொத்தல் தலைகாணி
                தாரேண்டி பொறுத்துக்கோடி?

42