பக்கம் எண் :

214

மலையருவி

மாமியாள் : கட்டையடிதின்னக் காலமாச்சு - இந்தக்
               குட்டைச்சிறுக்கிக்குக் கேலியாச்சு
           மட்டிச்சிறுக்கியால் மானம்போச்சு - இந்தப்
                பட்டிப்பொறுக்கியால் பங்கமாச்சு.

43

தட்டுவாணிபிள்ளைக்குத் தங்கமாச்சு
           ஊருசிரிக்கவும் காலமாச்சு - எங்கள் 
                பேருபறக்கவு நேரமாச்சு
           வம்சத்தில்இல்லாத இக்குரங்கு - எங்களை
               இம்சைப்படுத்துறா செங்குரங்கு.

44

மருமகள் : குரங்குகுரங்குண்ணு சொன்னியின்னால் - உன்
                கோடாலிக்கொண்டையை அறுத்திடுவேன்
           கேலிபண்ணாதடி கிழக்குரங்கே - உன்
                சோலியைப்பாரடி மடக்குரங்கே.   
        

45

மாமியாகொடுமைக்கு ஏத்தாப்போல - இந்த
                மருமகஇருப்பாண்ணு நினைச்சியாடி?
           . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

46

மாமியாஉடைச்சுட்டால் மண்சட்டியாம் - ஆனால்
                மருமகள் உடைச்சுட்டால்
பொன்சட்டியாம்
           அடக்குடிஅம்மாஉன் ஆங்காரத்தை - இனி
                இடிப்பேண்டிஉன்னைஎன்
                                    இஷ்டம்போலே.

47

பல்லும்இல்லைஉனக்குச்
சொல்லும்இல்லை - இப்போ
               பாசாங்குபண்ணினால் மோசம்போவாய்
           நாட்டியக்குதிரைபோல் ஆடாதேடி - நான்
               நாட்டுத்தட்டுண்ணு தெரியுமாடி?

48