பக்கம் எண் :

New Page 1

தெம்மாங்கு

23

வெள்ளைவெள்ளைச் சீலைக்காரி
        வெகுநாள் உறவுக்காரி

    வெள்ளைச்சீலை மங்கினாலும்
        வேடிக்கைதான் மங்காதடி.
                  

140

வெற்றிலையைக் கையில்வச்சு
        வெறும்பாக்கை நாக்கில்வச்சுச்

    சுண்ணாம்பு ஜாடைசொல்லி
        சுத்துறான்உன் அத்தைமகன். 
              

141

 வாட்டத்து வெற்றிலையை
        வாய்நிறைந்த தம்பலத்தைப்

    போட்டும் சிவக்கலையே
        புண்ணியரே என்னசெய்வேன்!
              

142

செம்பிலே சிலைஎழுதி
        சிவத்தபிள்ளை பேர்எழுதி

    வம்பிலே தாலிகட்டி
        வாழமனம் கூடலையே!                      

143

வாழ்க்கைப்பட மூக்காசை
        வளையல்போடப் பேராசை

    கொண்டவனைக் கண்டாக்கக்
        குடலைப் பிடுங்குதடி.
                 

144

உழுகாத மாடேநீ
        உழவறியாக் காளைக்கண்ணே

    நடக்காத மாடேநீ
        நாணயமாத் தாறுவாங்கு.
                   

145

ஆலம் விழுதுபோலே
        அவபோகும் ரோட்டுப்பாதை

    ஆல மரத்தைப்போலே
        அலைந்தலைந்து வளைந்திருக்கு.                   

146