கறுத
கறுத்தபிள்ளை உன்ஆசை
கழுத்தளவு தண்ணியிலே
சிவத்தபிள்ளை பேராசை
செத்தாலும் மறப்பதில்லை.
147
இடுப்புச் சிறுத்தவளே
என்குணத்துக் கேத்தவளே
நடையுஞ் சிறுத்தவளே
நான்வாறேன் உன்னைத்தேடி.
148
மலைமங்கள தேவியே
மலைக்குங்கீழே சடையாண்டியே
கொம்புதூக்கி ஐயனாரே
குழந்தைமேலே வந்திறங்கு.
149
கூந்தல் பனையோரம்
குளிரான கானலோரம்
ஏந்தும் பலகையிலே
இருந்துவந்த பகவதியே!
150
ஏலை மலையுங்கண்டேன்
ஏலமலைத் தோட்டங்கண்டேன்
பாவிப்பயல் பஞ்சம்வந்து
பண்ணைப்புரத் தோட்டங்கண்டேன்.
151
நாட்டுக்கு நாட்டுமட்டம்
நம்மரெண்டு ஜோடிமட்டம்
கோட்டுக்குப் போய்விட்டாலும்
கோடிசனம் கையெடுக்கும்.
152
மலையிலே மாமரமாம்
மாமனார் குத்தகையாம்
காயெறிந்த குற்றத்தாலே
கடுங்காவல்
கிடைத்ததம்மா.
153
|