க
கருமருந்தைத் தொளைக்குள்ளேதான்
- கண்மணியே
கணக்குப்போலக் கெட்டித்துத்தான்
திரியறுத்து மருந்தில்வச்சுக்
- கண்மணியே
தீக்கொளுத்தத் திடீரெண்ணுதான்
படாருண்ணு வெடிச்சிருச்சாம்
- கண்மணியே
பாறையெல்லாம் சுக்குச்சுக்கா.
30
வாணம்வேலை முடிஞ்சராவு -
கண்ணேஅப்பா
வாணவேடிக்கை காட்டினாரு.
நட்சத்திரம் நாள்எல்லாம்பார்த்துக்
- கண்மணியே
அஸ்திவாரம் போட்டாங்களாம்.
போயன்மாரு எல்லாருக்கும்
- கண்ணே அப்பா
போதுமான பணங்கொடுத்து
ராவேலையும் செய்யச்சொல்லிக்
- கண்ணேஅதுக்கும்
ஞாயமான பணங்கொடுத்துக்
காந்தத்திலே
விளக்குப்போட்டுக் - கண்மணியே
கணக்காவேலை முடிச்சாராம்.
35
சொன்னபடி சிவனாண்டியும்
- கண்மணியே
செங்கல்கொண்டுவந்
தடுக்கினானாம்.
மலைபோலே மணலைத்தானும்
- கண்மணியே
மாயாண்டியும் குவித்தானாம்.
சுறுசுறுப்பாச் சுப்பிரமணியும்
- கண்மணியே
சுண்ணாம்பெல்லாம்
கொண்டாந்தானாம்.
கருப்பட்டியும் கனமுட்டையும்
- கண்மணியே
கலந்தாங்களாம் சாந்துகூட.
கும்மியென்ன கூட்டமென்ன
- கண்மணியே
குனிந்துநிமிர்ந்தும்
குத்திக்கிட்டுத்
40
தில்லாலப் பாட்டுஎன்ன -
கண்மணியே
தெம்மாங்குப் பாட்டுஎன்ன
களைத்தவர்கள் நிற்கையிலே
- கண்ணேஅப்பா
காபிகூடக் கொடுத்தாராம்.
|