மரக
மரக்காரர் மரவேலையைக்
- கண்ணேஒண்ணும்
மறக்காமல்தான் முடித்திட்டாராம்.
கணக்கில்லாத கொத்தன்மாரும்
- கண்மணியே
கண்கொள்ளாத
சிற்றாட்களும்
சேர்வைகாரர் மூலத்தாலே
- கண்ணேஅவர்
செங்கல்வேலை துவக்கையிலே
45
ஆட்டம்என்ன பாட்டம்என்ன
- கண்மணியே
வேட்டிஎன்ன வேலைக்காரருக்கு!
கதவுநிலை வைக்கையிலே -
கண்மணியே
கடலை அவலும்என்ன
தேங்காய்என்ன பழங்கள்என்ன
- கண்மணியே
தெருவில்வெற்றிலை
பாக்குஎன்ன!
அகஸ்மாத்திலே வந்தவங்களுக்கும்
- கண்மணியே
அழகானபூ மாலைஎன்ன
கொட்டுஎன்ன மேளம்என்ன
- கண்மணியே
கொண்டையிலே பூவும்என்ன
50
கதவுகளும் சன்னல்களும் -
கண்மணியே
கணக்காக்கொத்தன்மார்
வச்சான்களாம்.
சட்டங்களும் விட்டங்களும்
- கண்மணியே
கட்டடத்திலே கணக்கில்லையாம்.
ஏழுமாசக் கெடுவுவச்சுக் -
கண்ணேநாம்
ஏழுமெத்தை வீட்டை
முடிச்சு
அரண்மனையார் அசந்துபோகக்
- கண்ணேஅப்பா
அட்டகாசம் பண்ணினாரே.
________
உறங்கிடம்மா!
ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ
சுருட்டைப் புளியமரம் -
கண்மணியே
சூதாடும் நந்தவனம்
|