பரட
பரட்டைப் புளியமரம் -
கண்மணியே
பந்தாடும் நந்தவனம்.
காக்காயும் கத்தக்கத்தக்
- கண்ணேரெண்டு
கன்னிமாரு வாறாங்க.
செம்போத்துக் கத்தக்கத்தக்
- கண்ணேரெண்டு
சேவகரு வாறாங்க.
5
ஆற்றுமண லைப்பரப்பிக் -
கண்ணேசோறு
ஆக்கிவிளை யாடையிலே
ஆக்கிநீ வச்சசோற்றைக்
- கண்மணியே
அழித்திட்டானோ உன்மாமன்?
மாமன் பொதிஅளக்கக் -
கண்மணியே
மச்சினன்மார் கோட்டைகட்டக்
கரும்புருக வேம்புருகக் -
கண்மணியே
கண்டவர்கள் மனமுருக
இரும்புருகப் பெற்றெடுத்த
- கண்மணியே
இருதயத்தை ஆரடித்தார்?
10
அத்தைமக்கள் வாசலுக்குக்
- கண்மணியே
நித்தநித்தம்
போகாதே.
பாம்படித்துப்
போடுவார்கள் - கண்மணியே
பழிகார அத்தைமக்கள்.
சோறு அடுப்பிலேதான் -
கண்மணியே
சோலைக்கிளி கையிலேதான்.
பாலும் அடுப்பிலேதான் -
கண்மணியே
பாலைக்கிளி கையிலேதான்.
ஆரு அடித்தார்கள் - கண்ணேஉன்னை
அரளிப்பூச் செண்டாலே?
15
மச்சினிச்சி அடித்தாளோ
- கண்ணேஉன்னை
மல்லிகைப்பூச் செண்டாலே?
ஒருச்சாய்த்துப் படுத்துநீ
- கண்மணியே
உறங்கிடம்மா தொட்டியிலே.
________
|